February 14, 2025, 9:36 AM
26.3 C
Chennai

இரு மாதங்களில் காதலனை 10 முறை கொல்ல முயன்றேன்- காதலி க்ரீஷ்மா..

2 மாதங்களில் காதலன் சரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் ( 23). இவர் குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். குமரி மாவட்டம் ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (22). இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்தார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கிடையே கிரீஷ்மா, காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து தீர்த்துக் கட்டினார். அதாவது காதலனுக்கு தெரியாமல் கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் அவருடைய உடல்நிலை கொஞ்சம், கொஞ்சமாக மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வித்தியாசமான கொலை சம்பவம் குமரி-கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 25-ந் தேதி ஷாரோன்ராஜ் இறந்தநிலையில் பாறசாலை போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் 30-ந் தேதி போலீசார் கிரீஷ்மாவை வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்றதை ஒப்புக் கொண்டார். தன்னுடைய எதிர்கால திருமண வாழ்க்கைக்கு காதலன் இடைஞ்சலாக இருப்பார் என கருதி அவரை தீர்த்துக் கட்டியது அம்பலமானது.

பின்னர் அவரை போலீசார் கைது செய்து 31-ந் தேதி அன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நெடுமங்காடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கழிவறையில் கிருமிநாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றதால் அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்ததால் கிரீஷ்மாவிடம் மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தவில்லை. பின்னர் கிரீஷ்மா உடல்நிலை தேறியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் அட்டக்குளங்கரை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரீஷ்மாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 7 நாட்கள் கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு போலீசாருக்கு அனுமதி வழங்கியது.

மேலும் விசாரணை நடைமுறை மற்றும் கொலை நடந்த இடத்திற்கு கிரீஷ்மாவை அழைத்து சென்று விசாரணை நடத்தும் போது அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அதனை சீலிட்ட கவரில் வைத்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சரோனின் கல்லூரி அமைந்துள்ள நெய்யூர் பகுதிக்கு க்ரீஷ்மாவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2 மாதங்களில் காதலன் சரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories