More
    Homeஅடடே... அப்படியா?செல்ஃபி மோகம் வந்தே பாரத்தில் ஏறி, தானியங்கி கதவு மூடியதால் 159 கி.மீ. பயணம்..

    To Read in other Indian Languages…

    செல்ஃபி மோகம் வந்தே பாரத்தில் ஏறி, தானியங்கி கதவு மூடியதால் 159 கி.மீ. பயணம்..

    வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய நபர் ஒருவர் அங்கே சில செல்ஃபிகளை எடுத்துக் கொண்டு இறங்க முயற்சித்தபோது தானியங்கி கதவு மூடிவிட அவர் விஜயவாடா வரை 159கிமீ பயணிக்க நேர்ந்துள்ளது. அந்த நபர் ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவர ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் ஏறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 15 ஆம் தேதி நடந்துள்ளது.

    இது குறித்து ரயில்வே துறை கூறியுள்ளதாவது: கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று ராஜமகேந்திரவரம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஆண் ஏறியுள்ளார். அவர் அந்த ரயிலில் பயணிக்க ஏறவில்லை. ரயிலில் சில செல்ஃபிகளை எடுத்துக் கொள்வதற்காக ஏறியுள்ளார். அதனால் அவர் டிக்கெட் ஏதும் வாங்கவில்லை. அந்த நபர் ரயிலை சுற்றிப் பார்த்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது ரயில் கதவு தானாக மூடி புறப்பட்டது. பதறிப்போன அந்த நபர் கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் கதவைத் திறக்க இயலவில்லை.

    இதனையடுத்து விஷயத்தை டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார். அப்போது அந்த டிக்கெட் பரிசோதகர் வந்தே பாரத் ரயிலில் இருப்பவை தானியங்கி கதவுகள். அவற்றை நாமாக திறக்க இயலாது. ரயில் நிலையம் வரும்போது தாமாகவே திறந்து குறிப்பிட்ட நேரத்தில் மூடிக் கொள்ளும் என்று எடுத்துரைத்திருக்கிறார்.

    இதனையறிந்த அந்த நபர் அதிர்ந்து போனார். ரயில் அடுத்ததாக விஜயவாடாவில் நிற்க டிக்கெட் எடுக்காமல் செல்ஃபிகாக ஏறிய அந்த நபர் 159 கி.மீ பயணம் செய்ய நேர்ந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்த நபருக்கு தகுந்த அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். இதனால் பார்வையாளர்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் ரயிலில் ஏற வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

    ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயிலை பார்க்கவும் அதனுள் படம் பிடித்துக் கொள்ளவும் நிறைய பேர் இதுபோல் வரும் நிலையில் இனி வந்தே பாரத் ரயில் வந்தவுடன் பயணிகள் அல்லாது மற்றவர்கள் அந்த ரயிலில் ஏற வேண்டாம் என்பது தொடர்பான அறிவிப்புகள் அந்தந்த ரயில் நிலையங்களில் வெளியிடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    16 + seventeen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...

    Exit mobile version