25-03-2023 4:26 AM
More
    Homeஅடடே... அப்படியா?சிட்பண்ட் நடத்தி ரூ. 9 கோடி மோசடி..?!

    To Read in other Indian Languages…

    சிட்பண்ட் நடத்தி ரூ. 9 கோடி மோசடி..?!

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் சிட்பண்ட் நடத்தி ரூ. 9 கோடி மோசடி செய்ததாக புகார் கூறி பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளி கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்த பழனிச்சாமி, செல்வராஜ் உள்ளிட்ட 7 பேர் இணைந்து எஸ்கேடி மற்றும் பிவிடி என்ற பெயரில் சிட் பண்ட் நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அப் பகுதியை சேர்ந்த 85 பேர் சுமார் ரூ. 9 கோடி வரை பணம் கட்டி உள்ளனர்.

    சிட் பண்ட் நடத்தி வந்த 7 உரிமையாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வாங்கிய பணத்தை திரும்ப வழங்காமல் கடந்த 8 மாதங்களாக ஏமாற்றி வருவதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் பழனிச்சாமியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பல முறை காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

    பொது மக்களின் இந்த போராட்டத்தால் தளவாய்புரம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    IMG 20230127 WA0073 - Dhinasari Tamil

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    sixteen + eight =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,632FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...