― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?‘திராவிட மாடலில்’ தமிழில் 100க்கு 138 மதிப்பெண் பெற்று சாதித்த மாணவி!

‘திராவிட மாடலில்’ தமிழில் 100க்கு 138 மதிப்பெண் பெற்று சாதித்த மாணவி!

- Advertisement -
marks in tamil
tamil mark fail

திராவிட மாடல் ஆட்சியில், தமிழில் 100க்கு 138 மதிப்பெண் பெற்று மதுரையைச் சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். ஆனாலும் அவர் மற்ற நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும், ‘தோல்வி’ அடைந்ததாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண் என்றும், நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண்களை தோல்வி எனவும் குறிப்பிட்டு இருந்ததால் 600க்கு 514 மதிப்பெண்கள் பெற்றும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சூரக்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (26) என்பவரது மனைவி ஆர்த்தி (19) ஏமாற்றம் அடைந்துள்ளார்.

கடந்த 2021ல் திருநகர் பள்ளியில் பிளஸ் 1 படித்த ஆர்த்தி, குடும்ப சூழ்நிலை காரணமாக வேல்முருகனைத் திருமணம் செய்துள்ளார். திருமண வாழ்க்கையால் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக ஆர்த்தியை இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் நேரடியாக பங்கேற்க வைத்துள்ளார் வேல்முருகன். இந்நிலையில், ஆர்த்தியின் தேர்வு முடிவுகள் வெளியான போது கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவர் தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்கள் பெற்று இருந்ததுடன், மற்ற நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தும் அவர் தோல்வி அடைந்ததாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்ததுதான்.

மற்ற பாடங்களில் ஆங்கிலம் 92, கணிதம் 56, இயற்பியல் 75, வேதியியல் 71, உயிரியல் 82 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அந்தப் பாடங்களில் தாம் தோல்வி அடைந்துள்ளதாக பட்டியலில் குறிப்பிடப் பட்டிருந்ததைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்த் ஆர்த்தி, இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து வருத்தம் வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறியபோது, மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100க்கு 138 என பிழையாக குறிப்பிட்டுள்ளனர். நான்கு பாடங்களில் 50க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அவற்றில் தோல்வி என குறிப்பிட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். இரு நாட்களில் மதிப்பெண் பட்டியல் வந்துவிடும். அதில் தவறாக வந்தால் சரிசெய்ய ஏற்பாடு செய்வோம் என்று கூறியுள்ளனர் என்றார்.

அவரது மதிப்பெண் பட்டியல் சமூகத் தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திராவிட மாடலே காரணம் என்று கிண்டலும் கேலியும் சமூக தளங்களில் பரவி பெறுகின்றன.

திராவிட மாடலில் தமிழ் வளர்ந்துள்ளது என்பதற்கு இதுவே எடுத்து காட்டு,😂 தமிழக முதல்வர், வருங்கால துணை முதல்வர் சின்னவர் ஆகியோர் ஆர்த்தியை சென்னையில் சந்தித்து சிறப்பு பரிசாக கருணாநிதி ஈவெரா சிலைகளை வழங்குவார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன 😂😂 தமிழை வளர்க்க இதுபோல் நூற்றுக்கு 138 மதிப்பெண் வழங்கிய ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது அல்லது அதற்கு மேல் ஏதாவது விருது தருவது குறித்து அன்பில் பொய்மொழியுடன் அவசர ஆலோசனையில் இறங்கி நீச்சலடித்து வருகிறார் 😂 – பசுத்தாய் கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version