January 25, 2025, 1:48 AM
24.9 C
Chennai

ரயில்சேவை எட்டிப்பார்க்காத தமிழக அரசியல்வாதிகள்

தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு, செங்கோட்டை வழியாக அமைக்கப்பட்டுள்ள புதிய அகல
ரயில் பாதையில் தொடர் வண்டி சேவை தொடக்கம். இரு மாநில மக்களும் சிறப்பான வரவேற்பு
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு பல்வேறு ரயில்கள் மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்தன. இந்த மீட்டாகேஜ் வழித்தடத்தை 2010ஆம் ஆண்டு அகலரயில் பாதையாக மாற்றிட சுமார் 350 கோடி ரூபாய் செலவில் பணிகள் 8 ஆண்டுகாலமாக நடைபெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிந்தது. இதனைத்தொடர்ந்து இந்த தடத்தில் ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என்று இரு மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் இந்நிலையில் வண்டி எண்: 06027, தாம்பரம் – கொல்லம் சிறப்பு ரயில் நேற்று தாம்பரத்திலிருந்து மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இன்று காலை 05.55க்கு செங்கோட்டை வந்தது. இந்த ரயில் கொல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு போய் சேரும். வண்டி எண்: 06028, கொல்லம் – தாம்பரம் சிறப்பு ரயில் இன்று, கொல்லத்திலிருந்து மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 05.55 மணிக்கு செங்கோட்டைக்கு வந்து பின்னர் சென்னை தாம்பரத்திற்கு செல்கிறது.
இன்று காலை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு வந்த ரயிலுக்கு கொல்லம், மாவேலிக்கரை பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடிக்குன்னில் சுரேஷ் பிரேமசந்திரன், ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு கொல்லம் புறப்பட்டது. அதனை இரண்டு எம்பிக்களும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில இரு மாநில மக்களும் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர் கேரளா அரசியல் வாதிகள் கட்சி பாகுபாடின்றி வந்திருந்தாலும் ,தமிழ் நாட்டில் இருந்து அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூட கலந்து கொள்ளாதது மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்ப்படுதியுள்ளது எட்டு ஆண்டுகள் கழித்து துவங்கியிருக்கும் இந்த விழாவிற்கு எட்டிப் பார்க்காத இவர்களா ? நமக்கு காவேரி நீரை பெற்றுத் தரப் போகிறார்கள்

ALSO READ:  தென்காசி மாவட்ட முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!