27-03-2023 11:51 PM
More
    Homeஅடடே... அப்படியா?சப்பைக் கட்டு கட்டும் சோபியாவின் தந்தை!

    To Read in other Indian Languages…

    சப்பைக் கட்டு கட்டும் சோபியாவின் தந்தை!

    sofia - Dhinasari Tamil

    விமானத்தில் கோஷம் போட்டுவிட்டு சட்டம் தெரியவில்லை என்றால் விட்டு விடுவார்களா?

    தொலைக் காட்சி மீடியா பேட்டியில் அந்த பெண்ணின் அப்பா நிறைய சப்பைக் கட்டு கட்டுகிறார். பெண்ணைப் படிக்கத் தான் கனடாவுக்கு அனுப்பினேன் என்கிறார். அரசியல் வேண்டாம் என்கிறார். ஆனால் தமிழிசை பயணம் செய்வது தேவேந்திர குல வேளாளரை பாஜகவில் இணைக்க என்கிறார். அரசியலே இல்லை என்று சொல்லிவிட்டு ஏன் மாற்றி மாற்றி பேசுகிறார்.

    பிறகு மகள் ட்விட்டர், முகநூலில் இல்லை என்கிறார். பிறகு ட்விட்டர் பற்றி சொன்னதும் எனக்கு தெரியாது என்கிறார்.

    எதையோ எதிர்பார்த்து எதையோ செய்துவிட்டு இப்போது கைது, காவல், நீதிமன்றம் என்று வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்பது நன்றாக புரிகிறது.

    அந்த பெண்ணுக்கு சொல்லப்பட்டது நீ கோஷம் போடு. தமிழிசை கண்டு கொள்ளமாட்டார்கள். என்பதாக இருந்திருக்கலாம்.

    இப்போது நிலைமை கைமீறி போனதில் அலறுகிறார் அந்த பெண்ணின் தந்தை. இவர் ஒரு அரசு மருத்துவ அதிகாரியாக வேலை செய்து ஒய்வு பெற்றவர். விதிகள் சட்டங்கள் தெரியாது என்பது மீறுவதில் இருந்தும், தண்டனையில் இருந்தும் காப்பாற்றாது. Ignorance of Law does not excuse anyone என்பார்கள்.

    சட்டம் படித்துவிட்டு என் பெண் கனடா போகவில்லை என்கிறார். படிக்காத கூலி வேலைக்காரர்கள் கூட இப்போது சகஜமாக வெளிநாட்டுக்கு பயணம் செய்கிறார்கள். விமானப் பயணத்தின் போது என்னென்ன கொண்டுபோகவேண்டும் என்பதில் இருந்து எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது வரை தெரியாதவர்களுக்கு தெரிந்தவர்கள் படித்து படித்து பாடம் எடுத்த பிறகு தான் எல்லோருமே விமானப் பயணம் செய்கிறார்கள்.

    இந்த பெண் கனடாவில் ஆராய்ச்சி மாணவி. அப்பா சொல்கிறார். இந்தப் பெண்ணுக்கு சட்டம் தெரியாது என்று.

    Ignorance of law means want of knowledge of those laws which a person has a duty to know and which everyman is presumed to know. … Ignorantia juris non excusat or Ignorantia legis neminem excusat is a Latin maxim which means “ignorance of the law does not excuse” or “ignorance of the law excuses no one.”

    வெற்று அரசியலுக்காக கண்ணை மூடிக் கொண்டு தவறை சப்பைக் கட்டு கட்டும் ஸ்டாலின், கமலஹாசன் போன்றோர் எத்தனை முறை விமானப் பயணம் செய்திருக்கிறார்கள் ? அவர்களுக்கு தெரியாதா பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று??

    இந்த நிகழ்வில் இருந்து ஒன்று தெரிகிறது. ஒரு சதிவலை பின்னப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் தமிழகத்தின் அரசியல் சூழல் கொதிநிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒரு கும்பல் உறுதியாக இருக்கிறது…

    அஸ்வின்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    10 − three =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...