சென்னை நகரை குற்றம் இல்லா நகரமாக்க பெரும் முயற்சியெடுக்கும் சென்னை மாநகர ஆணையரின் அறிவுரையை ஏற்று விருகம்பாக்கம் தொகுதி இளங்கோ நகர் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்களை இளங்கோ நகர் குடியிருப்பு சங்கம் நிறுவியுள்ளது.
இந்த கேமிராக்களை 27/12/2018 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு மாநகர ஆணையர் A.K.விஸ்வநாதன் துவக்கி வைத்தார். தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி, எம்.எல்.ஏ, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் J.ஜெயவர்தன்,MD ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.