2019 இந்த வருடம் நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் சந்தோஷ வருடமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது
இந்த வருடம் மிக முக்கியமான வருடம் தான் ! தற்போது நடைபெற்று வரும் மத்திய மோடி அரசு இந்த வருடம் மிகப்பெரும் தேர்தலை சந்திக்கிறது
இது நாட்டு மக்கள் மீதான ஓர் உழைப்பாளியின் நம்பிக்கைக்கு கிடைக்கும் பரிசாக அமையும்.
நாட்டின் நன்மைக்காக உழைக்கின்ற ஒரு பிரதமருக்கு நாட்டு மக்கள் எத்தகைய பரிசளிக்கப் போகிறார்கள் என்பதை காட்டும் வருடமாகவும் அமையும்
பொய்களாலும் பித்தலாட்டங்களும் நாட்டு மக்களை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் தள்ளிய ஊழல் காங்கிரஸ்காரர்கள் அகோர ஊழல் பசியுடன் மீண்டும் கொள்ளையடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள்… அவர்களுக்கு நாட்டு மக்கள் துணை போவார்களா என்பதை காட்டும் வருடமாகவும் இது அமையப்போகிறது.
இவை எல்லாம் கடந்து இந்த வருடம் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் இன்பமும் கூடிய வருடமாக… செய்திகளின் வருடமாக அமையப் போகிறது.
- கார்ட்டூன்… நன்றி… மதி