தமிழ் நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டு பையனை இந்தி படி என்று எந்த பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்?
பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு, எல்லா மக்களும் “இந்தி” “இந்தி” என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக்கொண்டு மிரள்வதா?
ஆரம்பத்திலே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாச வேலைகளும் இத்தனை உயிர்ச்சேதமும் உடமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காகக் கையில் தடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்”
– ஈ வெ ரா (பெரியார்)
ஆதாரம் : கிளர்ச்சிக்கு தயாராவோம், பெரியார் 1965 மே 28-30, நூல் மூன்றாவது மொழிப்போர் எதற்காக? ( பக்கம் 6, 10, 14, 15 ) ஈ.வெ.ரா
1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக ஈ வெ ரா வின் முழக்கம்.
- நாராயணன் திருப்பதி.