spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வெறுப்பு அரசியலுக்காக ‘தமிழ் வாழ்க’ முழக்கம்! உள்ளதை மறைத்த ஊடக கபட வேடதாரிகள்!

வெறுப்பு அரசியலுக்காக ‘தமிழ் வாழ்க’ முழக்கம்! உள்ளதை மறைத்த ஊடக கபட வேடதாரிகள்!

- Advertisement -

தமிழை அழிப்பதே என் நோக்கம் என்றார் ஈவேரா! ஆனால், நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக உறுதிமொழி ஏற்றவர்கள் தமிழ் வாழ்க; பெரியார் வாழ்க என்றனர். எப்படி இரண்டும் ஒரே நேரத்தில் வாழ முடியும்?  கொள்கை முரணாக, நகை முரணாக இருக்கிறதே என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் களை கட்டின.

இந்நிலையில், தமிழில் உறுப்பினர்கள் பதவி ஏற்றபோது எந்த பிரச்னையும் எழவில்லை. வடநாட்டு மக்களின் இயல்பு, சாதாரணமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போதும், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வது. பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட  மாநிலங்களில் வெகு இயல்பான ஒரு பழக்கம்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளான திங்கள் கிழமை அன்று, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். அப்போதும் அவர்கள் அவரவர் தாய் மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அந்த நேரமும் உறுப்பினர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு, அவர்களுக்கு வாழ்த்து சொன்னார்கள்.

ஆனால், தமிழக உறுப்பினர்கள் தமிழில் பதவி ஏற்றபோது, கைதட்டி ஆரவாரம் செய்த மற்ற வட நாட்டு உறுப்பினர்கள், பெரியார் வாழ்க என்ற முழக்கத்தை திமுக., உள்ளிட்ட சில உறுப்பினர்கள் அரசியலுக்காக செய்த போது, ஜெய் ஸ்ரீராம் முழக்கம் இட்டு அதையே உற்சாகக் குரலாக ஒலித்து ஆரவாரம் செய்தனர்.

இதில் எங்கும் அரசியல் இல்லை. ஊடகங்கள் வெகு இயல்பாக இருந்திருக்க வேண்டிய இந்த நிகழ்வை, வேண்டுமென்றே அரசியல் ஆக்கின. தமிழ் அரசியல் என்ற ரீதியில் ஊடகங்கள் இதனை மேற்கொண்டன.

இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு பதிவு, இந்தப் பின்னணியை நக்கல் அடிக்கும் விதத்தில் இருந்தது. பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் பகிரப்பட்ட அந்தக் கருத்து…

தனியார் செய்தி சேனல் ஒன்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி -கள் பதவியேற்றபோது #பாஜக எம்.பிகள் #ஜெய்ஸ்ரீ_ராம் கோசம் போட்டது எந்த வகையில் நியாயம் என்ற கோணத்தில் விவாதத்தை நடத்தியது.

இதில் பாஜக சார்பில் #வானதி_ஸ்ரீனிவாசன், கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் #வெங்கடேசன், திமுக சார்பில் #பிரசான்னா , மற்றும் எழுத்தாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விவாதத்தின் தொடக்கத்திலேயே திமுகவை சேர்ந்த பிரசன்னா வானதி சீனிவாசனை இது #பெரியார் மண், நாங்கள் திராவிட பிள்ளைகள் என்று சொல்லி வம்பினை இழுத்தார் அதற்கு வானதி தரப்பில் இருந்து பாஜக தமிழுக்கு என்று மதிப்பளிக்கும் இயக்கம் திமுக போல் நாடகமாடுவது எங்கள் பொழப்பு அல்ல #ஹிந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாடுவது ஆனால் திமுகவினர் இந்தி பள்ளிகளை நடத்தி வியாபாரம் செய்வது என்று வெளுத்துவாங்கி விட்டார்.

அதற்கடுத்து எழுத்தாளர் #பிரபாகரன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் #பிரசன்னாவால் வாயை திறக்கமுடியவில்லை, முதலில் திமுகவிற்கும், பெரியாருக்கும் என்ன தொடர்பு #அண்ணாவை, #கருணாநிதியை பெரியார் கிழித்த கிழியை இங்கு சொன்னால் அசிங்கமாகிவிடும் , பெரியாரை கருணாநிதி திட்டியதை சொன்னால் விவாதமே நடைபெறாது அப்படி ஒரு சண்டை போட்டுக்கொண்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்று பெரியாரை தூக்கி வைத்து கொண்டாட காரணம் என்ன என கேட்டார்.

தமிழக மக்களை தொடர்ந்து திமுக முட்டாள் ஆக்குகிறது தமிழை அழிப்பதே எனது முதல் நோக்கம் என்று சொன்ன பெரியார் எப்படி தமிழின தலைவராக முடியும்?! இதற்கு உங்களிடம் எந்த பதிலாவது இருக்கிறதா வீட்டு வேலைக்காரியிடம் கூட தமிழில் பேசாதே என்று சொன்னவர்தான் உங்கள் பெரியார் என்று வெளுத்து வாங்கிவிட்டார்.

மேலும் தலித்துகளை பெரியார் எத்தனை இடங்களில் அவமான படுத்தியிருக்கிறார், என்று சொன்னால் உங்களால் பதில் சொல்லமுடியுமா என்று கேட்க பதில் சொல்லமுடியாத பிரசன்னா எழுத்தாளரை வழக்கம்போல் தனிநபர் தாசுக்குதலுக்கு உள்ளாகினார்.

மேலும் எந்த இடத்திலும் திமுக தலைவர் கலைஞர் பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தை எழுதவில்லை என்று போகிற போக்கில் ஒரு பொய்யை எடுத்துவிட்டார்பிரசன்னா, அப்போது சரியாக எழுத்தாளர் ஆதாரத்தை தனது மொபைலில் இருந்து எடுத்துக்காட்டி 12 ம் தேதி ஜூன் மாதம் 1965 என்று நாளினை சரியாக குறிப்பிட்டு இன்று கலைஞர் பெரியாரை திட்டி இருக்கிறார் என்று தனது மொபைலில் இருந்த வீடியோ ஆதாரத்தை எடுத்துக்காட்டினார்.

[videopress jjaxKWfu]

 

இதற்கு பிரசன்னாவால் வாயை திறக்க முடியவில்லை.

மேலும் இப்படித்தான் வரலாற்று நிகழ்வுகளை கூட திமுகவினர் பொய் சொல்லி ஊரை ஏமாற்றுகிறார்கள் தமிழ் தமிழ் என்று கத்துபவனை நம்பாதீர்கள், தமிழனை உயர்த்துபவனை நம்புங்கள் என்று அதிரடியாக தனது பேச்சினை பேசி முடித்தார்.

எழுத்தாளர் பிரபாகரனின் குற்றச்சாட்டிற்கு பிரசன்னா கடைசிவரை வாயே திறக்கவில்லை…பிரபல தனியார் தொலைக்காட்சியில் பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி -கள் பதவியேற்றபோது #பாஜக எம்.பி – கள் #ஜெய்ஸ்ரீராம் கோசம் போட்டது எந்த வகையில் நியாயம் என்ற கோணத்தில் விவாதத்தை நடத்தியது.

இதில் பாஜக சார்பில் #வானதி_ஸ்ரீனிவாசன், கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் #வெங்கடேசன், திமுக சார்பில் #பிரசான்னா , மற்றும் எழுத்தாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விவாதத்தின் தொடக்கத்திலேயே திமுகவை சேர்ந்த பிரசன்னா வானதி சீனிவாசனை இது #பெரியார் மண், நாங்கள் திராவிட பிள்ளைகள் என்று சொல்லி வம்பினை இழுத்தார் அதற்கு வானதி தரப்பில் இருந்து பாஜக தமிழுக்கு என்று மதிப்பளிக்கும் இயக்கம் திமுக போல் நாடகமாடுவது எங்கள் பொழப்பு அல்ல #ஹிந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாடுவது ஆனால் திமுகவினர் இந்தி பள்ளிகளை நடத்தி வியாபாரம் செய்வது என்று வெளுத்துவாங்கி விட்டார்.

அதற்கடுத்து எழுத்தாளர் #பிரபாகரன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் #பிரசன்னாவால் வாயை திறக்கமுடியவில்லை, முதலில் திமுகவிற்கும், பெரியாருக்கும் என்ன தொடர்பு #அண்ணாவை, #கருணாநிதியை பெரியார் கிழித்த கிழியை இங்கு சொன்னால் அசிங்கமாகிவிடும் , பெரியாரை கருணாநிதி திட்டியதை சொன்னால் விவாதமே நடைபெறாது அப்படி ஒரு சண்டை போட்டுக்கொண்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்று பெரியாரை தூக்கி வைத்து கொண்டாட காரணம் என்ன என கேட்டார்.

தமிழக மக்களை தொடர்ந்து திமுக முட்டாள் ஆக்குகிறது தமிழை அளிப்பதே எனது முதல் நோக்கம் என்று சொன்ன பெரியார் எப்படி தமிழின தலைவராக முடியும், இதற்கு உங்களிடம் எந்த பதிலாவது இருக்கிறதா வீட்டு வேலைக்காரியிடம் கூட தமிழில் பேசாதே என்று சொன்னவர்தான் உங்கள் பெரியார் என்று வெளுத்து வாங்கிவிட்டார்.

மேலும் தலித்துகளை பெரியார் எத்தனை இடங்களில் அவமான படுத்தியிருக்கிறார், என்று சொன்னால் உங்களால் பதில் சொல்லமுடியுமா என்று கேட்க பதில் சொல்ல முடியாத பிரசன்னா எழுத்தாளரை வழக்கம்போல் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாகினார்.

மேலும் எந்த இடத்திலும் திமுக தலைவர் கலைஞர் பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தை எழுதவில்லை என்று போகிற போக்கில் ஒரு பொய்யை எடுத்து விட்டார் பிரசன்னா, அப்போது சரியாக எழுத்தாளர் ஆதாரத்தை தனது மொபைலில் இருந்து எடுத்துக்காட்டி 12 ம் தேதி ஜூன் மாதம் 1965 என்று நாளினை சரியாக குறிப்பிட்டு இன்று கலைஞர் பெரியாரை திட்டி இருக்கிறார் என்று தனது மொபைலில் இருந்த வீடியோ ஆதாரத்தை எடுத்துக்காட்டினார்.

இதற்கு பிரசன்னாவால் வாயை திறக்க முடியவில்லை.

மேலும் இப்படித்தான் வரலாற்று நிகழ்வுகளை கூட திமுகவினர் பொய் சொல்லி ஊரை ஏமாற்றுகிறார்கள் தமிழ் தமிழ் என்று கத்துபவனை நம்பாதீர்கள், தமிழனை உயர்த்துபவனை நம்புங்கள் என்று அதிரடியாக தனது பேச்சினை பேசி முடித்தார்.

எழுத்தாளர் பிரபாகரனின் குற்றச்சாட்டிற்கு பிரசன்னா கடைசிவரை வாயே திறக்கவில்லை..!

2 COMMENTS

  1. எல்லோரும் கபட வேடதாரிகள். நம்பத்தகுந்தவர்கள் அல்லர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe