முத்தலாக் நடைமுறையை ரத்து செய்யும் மசோதாவை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதியாகக் கொண்டு வந்து நிறைவேற்றியதை வரவேற்கும் வகையில், ராக்கி கயிறு அனுப்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வாராணசியின் ராம்பூரா பகுதியை சேர்ந்த ஹூமா பானோ கூறுகையில், பிரதமர் மோடியால்தான் முத்தலாக் முறை குற்றம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அவர் நம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் மூத்த சகோதரர் போன்றவர். எங்களது சகோதரருக்கு நாங்கள் ராக்கி கயிறு அனுப்பியுள்ளோம் என்றனர்.
சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன் விழா, நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.