Home சுய முன்னேற்றம் சுபாஷிதம்: பிறவிக் குணங்கள்!

சுபாஷிதம்: பிறவிக் குணங்கள்!

subhashitam-1
subhashitam 1

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

50. பிறவிக் குணங்கள்!

செய்யுள்:

தாத்ருத்வம் ப்ரிய வக்த்ருத்வம் தீரத்வமுசிதஜ்ஞதா |
அப்யாசேன ந லப்யந்தே சத்வாரஸ்ஸஹஜா குணா: ||

— சாணக்கிய நீதி

பொருள்:

தான குணம், அன்பாகப் பேசுவது, வீரம், சரியான முடிவு எடுத்தல் என்னும் நான்கு குணங்களும் பிறவியிலேயே வர வேண்டியவை. கற்றுக்கொண்டால் வரும் குணங்கள் அல்ல.

விளக்கம்:

சில குணங்கள் நம் டிஎன்ஏ வில் பீஜங்களாக பத்திரமாக இருக்கும். அனுகூலமான சூழலில் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்ளலாம். சரியான நேரம் வராவிட்டால் அவை முளை விடமாட்டா. அத்தகைய குணங்கள் என்ன என்பதை இந்த ஸ்லோகம் விவரிக்கிறது.

ஒரு விதை முளைக்க வேண்டும் என்றால் அதற்கு அனுகூலமான இடம் வேண்டும். அதற்குத் துணையாக வெப்பநிலை வேண்டும். அதேபோல் மனிதனிடம் பீஜ வடிவில் இருக்கும் சில குணங்கள் வளர்ந்து பெருக வேண்டுமென்றால் நல்ல பண்பாடு அதற்குத் துணை வர வேண்டும். அத்தகைய குணங்கள் யாவை என்று இந்த சுலோகம் காட்டுகிறது.

பிறரோடு பகிர்ந்து கொள்ளும் கொடை குணம்,  பிறர் மனதை நோகச் செய்யாமல்  இனிமையாகப் பேசும் குணம்,  கூற நினைத்தவற்றை தைரியமாகக் கூறுவது, சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பது…

இந்த சகஜ குணங்கள் அனுகூலச் சூழ்நிலையில் வளரும். தாய் புவனேஸ்வரி தேவி அளித்த பயிற்சியால் சிறுவன் நரேந்திரனின் (விவேகானந்தா) வாழ்க்கையில் இந்த நான்கு குணங்களும் வயதோடுகூட வளர்ந்தன.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version