February 15, 2025, 3:02 PM
30.7 C
Chennai

தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்த குரு பகவான்! கோயில்களில் சிறப்பு வழிபாடு!

செவ்வாய்க் கிழமை இன்று அதிகாலை 3.40க்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், குரு பகவான் வழிபாடு ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஜோதிடம் மற்றும் ஆன்மீகத்தில் நவக்கிரங்களில் முதன்மையான சுப கிரகம் என அழைக்கப்பட்டு, நற்பலன்களை தரக்கூடிய கிரகமாக குருபகவான் கருதப்படுகிறார். குரு பகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவதே குருபெயர்ச்சியாக அழைக்கப்படுகிறது. குருபார்க்க கோடி நன்மை என்று போற்றப்படும் குருபகவான் இன்று அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.

புகழ்பெற்ற சிவத் தலங்கள், தட்சிணாமூர்த்தி தலங்கள், குரு தலங்கள், குரு பரிகார தலங்களில் அதிகாலை முதலே அன்பர்கள் கூட்டம் அலைமோதியது. குருபகவானின் முக்கியத் தலங்களான ஆலங்குடி, தென்குடித்திட்டை, பாடி திருவலிதாயம், சிவகங்கை திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பட்டமங்கலம், காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள கோவிந்தவாடி அகரம், திருச்சியில் உள்ள உத்தமர் கோவில் உள்ளிட்ட தலங்களில் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகில் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள புளியறை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் வந்து குருபகவானை தரிசித்து அருள் பெற்றனர்.

நவக்கிரங்களில் குருபரிகார தலமாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஆபத் சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குருபகவானுக்கு இன்று அதிகாலை குருபெயர்ச்சி சிறப்பு யாகம், அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைப்பெற்றது.

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள குருபகவான் சந்நிதியில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அபிஷேக மற்றும் ஹோம திரவியங்கள், மஞ்சள் வஸ்திரம் கொண்டக்கடலை மாலை போன்றவை செலுத்தி வழிபட்டனர்.

திருவள்ளூரில் உள்ள காக்களூர் ஸ்ரீ யோக ஞான தக்ஷிணாமூர்த்தி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, குருபகவானுக்கு ஹோமம், பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை செய்தும், பின்னர் பரிகார பூஜையில் பங்கேற்றும் வழிபாடு நடத்தினார்கள். இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள வட ஆரண்யேஸ்வரர் ஆலயத்தில், தனி சன்னதியில் அமைந்துள்ள தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றி அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Entertainment News

Popular Categories