சீதா நவமி இன்று: புண்ணியமான சீதாதேவியின் அவதார நன்னாள் இந்த ஆண்டு மே 2-ஆம் தேதியாகிய இன்று கொண்டாடப்படுகிறது. சீதா ஜயந்தியாக வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
பூமியின் புதல்வியான சீதா, ஜனக மகாராஜாவால் வளர்க்கப்பட்டாள். விதேஹ சக்கரவர்த்தி ஜனகர் யக்ஞத்திற்காக பூமியை உழுத போது தங்கப் பெட்டியில் சிறு குழந்தையாக சீதா கண்டெடுக்கப்பட்டாள். அதனால் பூமியின் புதல்வி என்ற பொருள்படும் சீதா என்று பெயரிடப்பட்டாள்.
சீதாவின் பிறந்த நாள் வைசாக மாதம் சுக்லபட்சம் நவமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. சீதாதேவி பூச நட்சத்திரத்தில் செவ்வாயன்று பிறந்ததாக கூறப்படுகிறது.
சீதாதேவி மிகப்பெரும் சுயம்வரத்தில் ஸ்ரீராமரை மணந்தாள். சுயம்வரத்தின்போது ஸ்ரீராமர் சிவனின் பினாகம் என்ற வில்லை உடைத்து சீதையை கைபற்றினார். ஸ்ரீராமர், நவமி திதி அன்று சுக்கிலபட்சம் சித்திரை மாதத்தில் பிறந்தார். ஸ்ரீராம நவமிக்குப் பிறகு சீதா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
சீதா நவமி, மத்தியான முகூர்த்தமாக 2 மணி 40 நிமிடங்கள் கொண்டாடப்படுகிறது. காலை 10.58 லிருந்து மதியம் 1.38 வரை. அனைவருக்கும் சீதா நவமி வாழ்த்துக்கள்.