spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்குறை ஏதும் இல்லாமல் அனைவருக்கும் அருளும் சத்குரு: ஆச்சார்யாள் அருளமுதம்!

குறை ஏதும் இல்லாமல் அனைவருக்கும் அருளும் சத்குரு: ஆச்சார்யாள் அருளமுதம்!

- Advertisement -
IMG_20200807_201130_390

காட்டில் வசித்து வந்த ஒரு பிரம்ம ஞானிகள் தம் உடலையும் சுற்றுப்புற சூழலையும் மறந்து தமது பெரும்பாலான நேரத்தை யோகத்தின் உயர்ந்த நிலையான நிர்விகல்ப சமாதி லேயே கழித்தார்

ஒரு நாள் இரண்டு இளைஞர்கள் அவருடைய தெய்வீக சன்னிதியின் முன் வந்து பயபக்தியுடன் இரண்டு கைகளையும் குவித்து நமஸ்கரித்து கொண்டே அவர் சமாதியில் இருந்து வெளியே வரும் வரையில் அசையாமல் காத்து நின்றார்கள் பாதி மூடியிருந்த அவருடைய கண்கள் மெதுவாக திறந்ததும் அவருடைய கருணை பார்வை அந்த இளைஞர்களின் மேல் விழுந்தது உடனே அவர்கள் அந்த மகானின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள் தங்களை சிஷ்யர்களாக ஏற்றுக்கொள்ள பணிவுடன் கேட்டுக் கொண்டார்கள்

இரண்டற்ற பரம்பொருளை உணர்ந்து இருந்ததின் காரணமாக அவர் எல்லா கடமைகளில் இருந்தும் ஆசைகளில் இருந்து முழுமையாக விடுபட்டு இருந்ததால் இருந்தபோதிலும் அவர் கருணைக் கடலாக இருந்த காரணத்தினால் அவர்கள் இருவருடைய வேண்டுகோளுக்கு ஆட்சேபணை ஏதும் இன்றி ஒப்புக்கொண்டார். குரு சேவையை செய்வதென்பது சிஷ்யனுக்கு ஒரு ஒப்பற்ற காரியம் அதற்கு ஒரு வாய்ப்பை சிஷ்யனுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அவர் தனது காவி உடைகளை துவைப்பது தவம் புரியும் இடத்தில் சுத்தப்படுத்துவது மற்றும் காட்டை ஒட்டி இருந்த கிராமங்களுக்குச் சென்று பிச்சை எடுத்து உணவைக் கொண்டு வருவது போன்ற அன்றாட காரியங்களை அவர்களுக்குக் கொடுத்தார் ஞானி.

அவ்விருவருக்கும் மந்திர உபதேசத்தை அருளி தியானம் பழகும் முறையையும் கற்று தந்தார் அவர்களில் ஒருவன் குறுகிய காலத்திற்குள்ளேயே ஞானத்தில் சிறந்து விளங்கினான் தனது உடலை மறந்து மன ஒருமைப்பாட்டுடன் பாறைபோல் அசையாமல் மணிக்கணக்கில் அவனால் தியானம் செய்ய முடிந்தது

மற்றொருவன் மனப்பூர்வமாக நாள் தவறாமல் தியானம் செய்வதற்காக முயற்சி செய்தான் ஆனால் கடலில் தோன்றி மறையும் அலைகளைப் போல் அவன் மனதில் இடைவிடாமல் தோன்றிய பல்வேறு எண்ணங்கள் அவனது முயற்சிகளுக்கு குந்தகத்தை விளைவித்தன.

கற்றுக்கொடுக்கும் பாடம் முழுவதையும் உடனே கிரஹித்துக் கொண்டு விடுவான் மிகவும் சிரத்தையோடு வகுப்புகளில் கலந்துகொண்டு குறை சொல்வதை கவனமாகக் கேட்டு பாடங்களை நீண்ட நேரம் படிப்பான் ஆனால் அவன் எவ்வளவு புத்திசாலியாக இல்லாதது அவன் தோழனைக் காட்டிலும் மிகக் குறைவாகவே அவனால் விஷயங்களை கிரகித்துக் கொள்ள முடிந்தது

இரண்டு சிஷ்யர்களும் தங்களுக்குப் பணித்த காரியங்களை திறமையாக செய்து முடித்தார்கள் இப்படி ஐந்து வருடங்கள் கழிந்தன ஒருநாள் தனது சிஷ்யர்களை அழைத்து உங்கள் பாடங்கள் எல்லாம் முடிந்து விட்டன நீங்கள் உங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று கூறினார்

அவர்கள் தங்கள் குருவை நேசித்ததால் குருவை விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்து பார்ப்பது மிகவும் வேதனையாய் இருந்தது இருந்தாலும் குருவின் கட்டளையை நான் அவன் எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளும் எத்தகைய காரணத்தினாலும் மீறக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தார்கள். ஆகையால் குருவின் வார்த்தைக்கு மரியாதை அளித்து அவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

முதல் சிஷ்யன் குருவை நமஸ்கரித்தான் குரு தன் கையை மேலே உயர்த்தி அபய முத்திரை காட்டி அவனை ஆசீர்வதித்தார் இரண்டாவது சிஷ்யன் நமஸ்கரித்த போது ஒருவித தெய்வீக தன்மையோடு சிஷ்யனின் தலையில் கரம் வைத்து இத்தருணம் முதற்கொண்டு உணர்ந்த ஞானியாக கடவது என்று உறுதியோடு கூறினார். அவருடைய பேரருளின் சக்தியால் அந்த சிஷ்யன் அக்கணமே முற்றும் உணர்ந்த ஞானியாக பிரகாசித்தான்.

தனது நண்பனுக்கு கிடைத்த விசேஷமான அனுக்கிரகத்தை கண்டு முதல் சிஷ்யன் வருத்தமடைந்தான் குருவிடமிருந்து தனது உணர்வுகளையும் எண்ணங்களையும் அவன் மறைக்காமல் தனது கைகளை குவித்து நமஸ்காரம் செய்து குருவே என் மனதில் ஒரு சந்தேகம் உங்களிடம் கூறுவதற்கு அனுமதி கோருகிறேன்

தங்கள் அனுகிரகத்தால் நான் செய்துவந்த தியானம் அவனுடையதை காட்டிலும் மேலானதாக இருந்தது வேதாந்த பாடங்களையும் நான் அவனைக் காட்டிலும் அதிகமாக வைத்துக்கொண்டேன் அப்படி இருந்தும் தாங்கள் அந்த விசேஷமான அனுக்கிரகத்தை என்மேல் காட்டாமல் அவன் மேல் பொழிந்தது ஏன் அதற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா

ஒருவேளை நான் இப்படி கேள்வி கேட்பது தவறாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று அவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான். கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு முன் உன்னிடம் சில கேள்விகளை நான் கேட்கிறேன் என்னை பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டார் குரு.

அதற்கு நீங்கள் என்னுடைய மரியாதைக்குரிய ஒரு ஞானி பர பிரம்ம நிலையை அனுபவத்தில் பெற்றிருக்கும் தாங்கள் அடைய வேண்டியவை அனைத்தையும் அடைந்தவர் என்று கூறினான்

தன்னுடைய சிஷ்யர்கள் இடத்தில் வியாபார நோக்கோடு நடந்துகொள்ளும் ஒருவனை போலவா நான் தெரிகிறேன் என்று கேட்டார் குரு சிஷ்யன் நிச்சயமாக இல்லை என்றான் குழந்தாய் நீ உன்னுடைய மேலான தியானத்தையும் மற்றும் வேதாந்த பாடங்களையும் நன்கு கிரகித்துக் கொள்ளும் உனது திறமையையும் கொண்ட நீ நான் ஒரு வியாபாரி இல்லை என்றும் உறுதிபடக் கூறுகிறாய் பிறகு எப்படி சிஷ்யன் புரியும் குரு சேவையையும் உன்னுடைய வேதாந்த பாடங்களையும் கிரகித்துக் கொள்ளும் சாமர்த்தியம் நான் சொல்லிக்கொடுத்த தியானத்தை பழகியதில் கண்டுகொண்ட வளர்ச்சியையும் கணக்கில் வைத்து அதற்கு ஏற்றவாறு உன்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நீ நினைக்கலாம்?

IMG_20200808_200509_052

அடைய வேண்டியவை அனைத்தையும் அடைந்தவன் நான் என்றும் சொல்கிறாய் அப்படி என்றால் உங்களுடைய சேவையினால் அல்லது தியானத்தில் சிறந்தவர்கள் இதனை உருவாக்கியது ஆக வேண்டியது ஒன்றுமில்லை உங்கள் மூலமாக என் பெயர் எண் திசைகளிலும் பரவி அதனால் நான் பேரும் புகழும் அடைய வேண்டிய அவசியமும் இல்லை இப்பொழுது உன் நண்பன் அடைந்துள்ள இந்த ஆத்ம ஞானத்தை தியான மார்க்கம் இருக்கின்றன ஆமாம் தியானமும் விசாரமும் மார்க்கங்கள் சரியான முறையில் அவற்றை ஒருவன் பழகி வந்தால் அவை அவனுடைய அகம் பாவத்தை அழித்து விடும் ஆனால் நீயும் நானும் நன்கு தியானம் செய்கிறேன் நான்கு வேதம் கற்ற ஒரு பண்டிதன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறாய் இத்தகைய எண்ணத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது உன்னுடைய நண்பன் நான் ஒன்றும் இல்லாதவன் என்னுடைய குரு என்னை இந்த நிலையில் வைத்திருக்க விருப்பபடுகிறாரோ அவ்வாறே செய்யட்டும் என்று எனக்கு அது போதும் விருப்பப்படி என்ன செய்தால் அது எனக்கு சம்மதம்தான் என்று நினைக்கிறான்

ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையாத ஒருவனாலேயே நேரடியாக ஆத்ம ஞானம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றாகி விட்டால் பிறகு இந்த ஆன்மீக சாதனைகள் எல்லாம் ஒதுக்கப்பட வேண்டியவை ஆகிவிடும் என்று சிஷ்யன் கூறுகிறான்.

குரு செல்கிறார் இல்லை ஒரு சிஷ்யன் தன்னுடைய சக்திக்குத் தக்கவாறு அதிகபட்சமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு குருவின் கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் இதற்கு பதில் நான் என் குரு காட்டிய வழியில் செல்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று நியாயம் ஏதும் இல்லை அவரின் லட்சியத்தை அடையுமாறு செய்யட்டும் என்று நினைத்து ஒரு சிஷ்யன் சோம்பலுடனும் அல்லது அதில் இருந்து விட்டால் அவன் நிச்சியமாக ஆத்ம ஞானம் அடைய மாட்டான் சந்தேகமின்றி உன் நண்பன் தன்னால் முடிந்த அளவு சாதனைகளை செய்தான் அவனைக் காட்டிலும் அதிகத் திறமை வாய்ந்த ஆன்மிக சாதனைகளை செய்தாய் நான் உங்கள் இருவரையும் சமமாகவே நேசிக்கிறேன் பத்து வயதை எட்டிய ஒரு குழந்தையை கவனித்துக் கொள்வதைக் காட்டிலும் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை ஒரு தாய் அதிகம் கவனிப்பாள் அதற்காக முதல் குழந்தையிடம் தாய்க்கு பாசம் குறைந்து விட்டது என்று சொல்லி விட முடியாது இரண்டாவது குழந்தைக்கு கவனம் தேவை

நீ புத்திசாலி படித்தவன் தியானம் நன்கு செய்பவன் ஆம் பாவத்தை நினைத்து விடு பிறகு என்னுடையதுதான் அதற்கு வேண்டிய பரிபூரண ஆசீர்வாதங்களைப் நான் உனக்கு வழங்குகிறேன் பிறந்த குழந்தையைப் போல உன் நண்பனுக்கு உதவி புரிய யாருமில்லை அவன் புத்திசாலி அல்ல நன்கு படித்தவன் அல்ல தியானம் செய்வதற்கு அமர்ந்தாலும் காற்றைப்போல அவன் மனம் எல்லா திசைகளிலும் அலைபாய்கிறது நானும் அவனை கை தூக்கி விட வில்லை என்றால் அவன் நிலைமை மிக மோசமாகிவிடும் அதனால்தான் அவனுக்கு விசேஷமாக அனுக்கிரகத்தை வழங்கினேன்.

என்னைப் பொறுத்தவரையில் நீயும் விரைவிலேயே முக்தி அடைவாய் இந்த விஷயத்தில் நீ சந்தேகப்பட கவலைப்பட வேண்டாம் உன் மூலமாக ஏராளமான மக்கள் உன்னால்நன்மை அடையப் போகிறார்கள் குருவும் சிஷ்யனும் அந்தரங்கமாக பேசிக் கொள்ள ஏதுவாக தள்ளி நின்று கொண்டிருந்த இரண்டாவது சிஷ்யன் அருகில் அழைத்தார் குரு நீ நமஸ்காரம் செய்யும் போது நான் உன்னை புறக்கணித்து இருந்தால் நீ என்ன நினைத்திருப்பாய் என்று கேட்டார் குரு

2 வந்து சிஷ்யன் எனக்கு எல்லாமே நீங்கள்தான் எனக்கு எது நல்லது என்று நீங்கள் நன்கு அறிவீர்கள் ஆகையால் நீங்கள் என்னை புறக்கணித்து இருந்தாலும் வெறுத்து சபித்து இருந்தாலும் அமைதியாக ஏற்றுக் கொண்டிருப்பேன் என்றான்.

அவனுடைய ஆழ்ந்த பக்தியை பார்த்தாயா அவனை சபிப்பதைக்கூட முழுமனதோடு ஏற்றுக் கொள்வதாக கூறும் அவனது வார்த்தைகள் முற்றிலும் உண்மையானவை நான் உன்னை ஆசீர்வதித்து கூட உனக்குத் திருப்தி உண்டாகவில்லை அவனுடைய பக்திக்கும் உன்னுடைய பக்திக்கும் என்ன ஒரு வேற்றுமை என்று ஆச்சரியப்பட்டார். முதல் சிஷ்யன் வெட்கத்தால் தலை குனிந்தான் அவனை கருணையோடு பார்த்த குரு உனது ஆன்மீகப் பாதையில் குறுக்கே இருந்த உன் அகங்காரத்தை விளக்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதற்காக தான் உன்னுடைய நண்பனை கேள்வி கேட்டேன் அதை நீக்கி இப்பொழுது உன் உள்ளத்தில் அமைதி குடி கொண்டிருப்பதால் நீயும் உயர்ந்த பதவியை அடைவாய் இக்கணமே பிரம்மசாக்ஷாத்காரத்தை அடைவாய் என்று சொல்லி தமது கருணை மழையை பொழிந்தார்.

குருவின் கருணை வெள்ளத்தில் மூழ்கிய முதல் சிஷ்யன் தாமதமின்றி ஒரு நிலையில் இருந்த இரண்டற்ற பரபிரம்ம நிலையை அடைந்தான் உயர்ந்த சத்குரு சிஷ்யருக்குள் இருக்கும் பாகுபாடுகளை பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு சிஷ்யனுக்கும் எது நன்மை பயக்கும் என்பதை அறிந்துகொண்டு அதன்படி அவர்களை அவர் அனுக்கிரகம் செய்கிறார் அவர் அனுக்கிரகம் செய்யும் போது எப்போதும் குறை காண முடியாதது ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe