spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்புத்தியற்ற சிஷ்யன்: ஆச்சாரியாள் அருளமுதம்!

புத்தியற்ற சிஷ்யன்: ஆச்சாரியாள் அருளமுதம்!

- Advertisement -

ஒரு பசுவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது அதன் சொந்தக்காரன் பசுவை மிருக வைத்தியரடம் அழைத்துச் சென்றான் வைத்தியர் ஒரு மருந்தைச் சொல்லி அதை நெய்யில் கலந்து கொடுத்தாள் காய்ச்சல் குணமாகிவிடும் என்று கூறினார் பசுவின் சொந்தக்காரன் பசும்பாலை கொடுக்கிறது அதிலிருந்துதான் தயிரும் வெண்ணெயும் கடைசியில் நெய்யும் நமக்கு கிடைக்கிறது இருக்கவேண்டிய மூலப்பொருள் பசுவின் இடத்திலேயே இருக்கிறது அப்படி இருக்கையில் தனியாக நான் ஏன் மருந்தை நீரில் கலக்கி கொடுக்க வேண்டும் என்று யோசனை செய்தான். தான் நினைத்தபடியே நெய் சேர்க்காமல் மாட்டிற்கு கொடுத்தான் விவேகமானது நோயை குறைப்பதற்கு பதிலாக அதிகமாகிவிட்டது

சிஷ்யன் குருவின் கட்டளையிலிருந்து சிறிதளவு விலகாமல் அவற்றை அப்படியே கடைசி எழுத்து வரை நிறைவேற்ற வேண்டும். அவற்றுள் தனது சொந்த கருத்துகளை புகுத்தப்பட்ட பால்காரனை போல் ஆகிவிடும்.

ஒரு ஆசிரியருக்கு இரண்டு முட்டாள் சிஷ்யர்கள் இருந்தார்கள் ஒரு நாள் அவர் தன் சிஷ்யனை அழைத்து என்னுடைய இரண்டு கால்கள் வலிக்கின்றன ஆகையால் நீங்கள் இருவரும் சேர்ந்து என் கால்களை கொஞ்சம் பிடித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். உடனே சிஷ்யர்கள் இருவரும் ஆளுக்கொரு காலை பற்றிக் கொண்டு அழுத்தி தேய்க்க தொடங்கினார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் சிறிது ஓய்வு எடுப்பதற்காக அவர் தமது வலது காலை தூக்கி இடது காலின் மீது வைத்தார். இடது காலை அமுக்கி கொண்டிருந்தவன் என்ன இது என்னுடைய குருவின் பவித்திரமான பாதத்தில் இதில் ஏதோ ஒன்று வந்து விழுகிறதே குருவின் மீது பக்தியுள்ள நான் இதனை எவ்வாறு அனுமதிக்கலாம் என்று நினைத்தான் அந்த வலது கால் தன் குருவின் கால்தான் என்று உணராத அந்த மூடன் அக்காலை முரட்டுத்தனமாக பிடித்து தள்ளினான். இதை பார்த்த அடுத்த சிஷ்யன் நீ என்ன செய்வதாக எண்ணிக் கொண்டு இருக்கிறாய் உனக்கு என்ன தைரியம் இருந்தால் இப்படி என் குருவின் காலை தூக்கி எறிவார் என்று கடிந்து கொண்டே இடது காலைப் பிடித்து தள்ளினான் மறுபடியும் வலது காலைத் தூக்கி எறிந்தான். சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் கோபித்துக் கொண்டு குரு வின் கால் வலியை அதிகப்படுத்தி விட்டார்கள். பொறுமையை இழந்து ஆசிரியர் எழுந்து உட்கார்ந்து கால்களை பிடித்து விடடுவீர்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் உங்களால் எனக்கு வலி அதிகமாகி விட்டது. இங்கிருந்து முதலில் வெளியே போய் விடுங்கள் என்று கோபத்துடன் கடிந்து கொண்டார்.

குருவுக்கு சேவை புரிவது என்பது மிக முக்கியமானது குருவின் உத்தரவை பெற்று கொண்ட பிறகே கவனத்துடன் சேவையை சிஷ்யன் செய்ய வேண்டும் தவறாக செய்யும் சேவையானது குருவிற்கு சங்கடத்தைத் தரும்.

நான்கு மாணவர்கள் ஒரு குருவை அணுகி மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொண்டார்கள். பாடங்கள் எல்லாம் முடிந்ததும் ஊருக்குப் புறப்பட்டார்கள். காட்டை கடந்து செல்லும் போது ஒரு புலி இறந்து கிடப்பதை பார்த்தார்கள். அவர்களும் இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்யும் சஞ்சீவினி மந்திரத்தை நாம் நன்கு அறிவோம். ஏன் அதனை சோதித்து பார்க்க கூடாது. மந்திரத்தை பிரயோகித்து பார்த்துவிடலாம் என்று கூறினார்கள். அவர்களுடைய விரோதமான செயலில் இருக்கும் ஆபத்தை நான்காவது மாணவன் அறிந்திருந்ததால் அவ்வாறு செய்ய வேண்டாம் என எடுத்துரைத்தான். ஆனால் அவர்கள் அவனுடைய வார்த்தைக்கு செவி சாய்க்கவில்லை. ஆகையால் அவன் அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி ஒரு கிளையில் அமர்ந்து கொண்டான். அவனுடைய நண்பர்கள் சஞ்சீவினி மந்திரத்தை ஜெபிக்க தொடங்கினார்கள். புலி உயிர்த்தெழுந்தது. பயங்கர பசியில் இருந்த புலி அம்மூவரையும் தன் உண்டு பசியைப் போக்கிக் கொண்டது.

மந்திர சாஸ்திரத்தில் நல்ல புலமை இருந்தபோதிலும் அடிப்படை அறிவு இல்லாத காரணத்தினால் ஒவ்வொருவரும் தங்கள் உயிரை இழந்தார்கள். ஒருவனுடைய மனம் வெட்டுவதற்குத் பெறுவதற்கு தகுதியற்ற கத்தியை போன்றது. ஆற்று இடமிருந்து பெரும் அறிவேவ பண்படாத மனதை கூர்மையாக்குகிறது. ஞானமானது குரங்கின் கையில் கிடைத்த கூர்மையான கத்தியைப் போலாகும் எனவே ஒருவனுக்கு கல்வி அறிவு இருக்க வேண்டும். அடிப்படை அறிவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புற கண்கள் இருப்பினும் மனதளவில் அவன் ஒரு குருடன் ஆவான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe