Home ஆன்மிகம் நீங்க என்ன ராசி..? பிள்ளையாரை இப்படி வழிபடுங்க..!

நீங்க என்ன ராசி..? பிள்ளையாரை இப்படி வழிபடுங்க..!

எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்?

வினை தீர்க்கும் விநாயக பெருமானை, விநாயகர் சதுர்த்தி அன்று விரதமிருந்து, அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அவருக்குப் பிடித்த அருகம்புல், கொழுக்கட்டை ஆகிய பொருட்களை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், விநாயகரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

விநாயக சதுர்த்தியன்று, ஒவ்வொருவரும் அவரவர் ராசிக்கு ஏற்ற அபிஷேகப் பொருட்களால் விநாயகரை அபிஷேகம் செய்து வழிபட, விநாயகரின் அருள் கிடைக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்காரர்கள் மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் சித்தியாகும்.

ரிஷப ராசிக்காரர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

மிதுன ராசிக்காரர்கள் எலுமிச்சைச்சாறினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.

கடக ராசிக்காரர்கள் பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் இன்னல்கள் நீங்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், விருப்பங்கள் நிறைவேறும்.

கன்னி ராசிக்காரர்கள் சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பகை விலகும்.

துலாம் ராசிக்காரர்கள் தேனால் அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும்.

vinayakar

விருச்சக ராசிக்காரர்கள் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும்.

தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் தேனால் அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

மகர ராசிக்காரர்கள் சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.

கும்ப ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.

மீன ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version