பொறுமை என்பது அனைவருக்கும் மிக அவசியம், சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூடக் கோபித்துக்கொண்டு அதன் மூலம் தகாத விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
விளைவுகளைப் பார்த்த பிறகுதான் நாம் கோபம் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆகவே, அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரேயே கோபத்தை அடக்கிக்கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்தால் அது மிகவும் உத்தமம்.
நம்முடைய முன்னோர்களின் சரித்திரங்களைப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு பொறுமைசாலிகளாக இருந்தார்கள் என்று நாம் அறியலாம்.