― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்அன்னபூர்ணாஷ்டகம்: தமிழ் அர்த்தத்துடன்..!

அன்னபூர்ணாஷ்டகம்: தமிழ் அர்த்தத்துடன்..!

- Advertisement -
annapoorni

அன்னபூர்ணாஷ்டகம்

ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய அன்னபூர்ணாஷ்டகம் லலிதாம்மாவின் தமிழாக்கத்தில்…

நித்யானந்தகரி வராபயகரி சௌந்தர்ய ரத்னாகரி
நிர்தூதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரி
ப்ராலேயாச்சலவம்சபாவநகரி காஷீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி

பேரின்பமளிப்பவளே!அஞ்சேலென்றருள்பவளே!பேரெழில் பொங்குங்கடலே!
தீவினைகள் யாவையும் போக்கியருள் பொழிந்திடும் கண்கண்ட தெய்வத்தாயே!
பனிமலையோன் குலந்தனை புனிதமாக்கியவளே!காசிநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!

நானாரத்ன விசித்திர பூஷணகரி ஹெமாம்பராடம்பரி
முக்தாஹார விலம்பமான விலசத்வக்ஷோஜா கும்பாந்தரி
காஷ்மீராகருவாசிதாங்கருசிரே காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பனகரி மாதான்னபூர்ணேஸ்வரி

பலவகை அணிகலன்கள் பூண்டகரத்தாளே!பொன்னாடை தரித்த தாயே!
தாய்மை பொங்கும் மார்பில் முத்துமாலையழகாய் நெளிந்திட மிளிரும் தூயே!
காஷ்மீரதூப மணம் கமழ்ந்திடத் திகழ்பவளே!காசிநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!

யோகானந்தகரி ரிபுக்ஷயகரி தர்மேகநிஷ்டாகரி
சந்த்ரார்காநலபாசமானலஹரி த்ரைலோக்யரக்ஷாகரி
சர்வைஸ்வர்யகரி தபஹ்பலஹரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி

யோகசுகந்தருபவளே!பகைவரைப்பொடிப்பவளே!நன்னெறியில் நிறுத்துந்தாயே!
மதி,பரிதி,தீயொளிக்கு ஒப்பாய் ஒளிர்பவளே!மூவுலகுங்காக்குந்தேவி!
பொருள்வளம் அருள்பவளே!தவப்பயனைத் தருபவளே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே !அன்னபூரணீ அன்னையே!

கைலாசாச்சல கந்தராலயகரி கெளரி உமா சங்கரி
கௌமாரி நிகமார்த்த கோசரகரி ஓங்கார பீஜாக்ஷரி
மோக்ஷத்வாரகவாடபாடநகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பனகரி மாதான்னபூர்ணேஸ்வரி

கயிலாய மலைக்குகையில் அமர்ந்தருள் பொழிந்திடும் கெளரி,உமா,சங்கரி!
என்றென்றும் குமரியே!மறைபொருளுரைப்பவளே!பிரணவத்தின் உண்மையுருவே!
மோக்ஷத்து வாயிலை திறக்குந்தயாபரி!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!

த்ருஷ்யாத்ருஷ்யவிபூதிவாஹநகரி பிரம்மாண்டபாண்டோதரி
லீலாநாடகசூத்ரகேலநகரி விஞ்ஞானதீபாங்குரி
ஸ்ரீவிச்வேசமனஹ் பிரசாதநகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி

மண்ணுலகசுகம் யாவும் மகிழ்ந்தருளும் அன்னையே!பிரம்மாண்டம் தாங்குந்தாயே!
விளையாட்டாய் உலகையே இயக்கிடும் ஈஸ்வரி!விஞ்ஞான தீபச்சுடரே!
மகேசன்மனத்தினை மகிழ்விக்கும் மங்கையே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!

ஆதிக்ஷாந்தசமஸ்தவர்ணநகரி சம்போஸ்த்ரிபாவாகரி
காஷ்மீரா த்ருபுரேச்வரி த்ரினயநீ விஷ்வேச்வரீ சர்வரி
ஸ்வர்கத்வாரகவாடபாடநகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி

அனைத்தெழுத்தும் அருளிய அன்னையே!அரனின் முத்தொழிலுக்கு ஆதாரமே!
குங்கும நெற்றியளே !மூவுலக நாயகியே!எங்கும் நிறை முக்கண்ணியே!
சுவர்க்கத்தின் வாயிலை திறக்குந்தயாபரி!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!

உர்வீசர்வஜநேச்வரி ஜயகரி மாதா க்ருபாசாகரி
வேணிநீலசமானகுந்தலதரி நித்யான்னதாநேச்வரி
சாக்ஷான்மோக்ஷகரி சதா சுபகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி

உலகாளும் உத்தமியே!வெற்றிதரும் உமையாளே!தாயன்பு தளும்புங்கடலே!
பின்னிய கார்குழலாளே!எந்நேரமும் உணவு அளித்துயிர் காக்குந்தாயே!
முக்தியளிப்பவளே!நலந்தரும் நாயகியே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணி அன்னையே!

தேவி சர்வவிசித்ர ரத்னரசிதா தாக்ஷாயணீ சுந்தரி
வாமாச்வாதுபயோதரா ப்ரியகரி சௌபாக்ய மாஹெச்வரி
பக்தாபீஷ்டகரி சதாசுபகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி

அரிய ஆபரணங்கள் அணிந்த என் அன்னையே!தக்ஷன் பெற்ற பேரழகியே!
பரமனில் பாதியே!பேரெழில் ஜோதியே!குணக்குன்றே!குலவிளக்கே!
அடியார்க்கருள்பவளே!நலந்தரும் நாயகியே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!

சந்த்ரார்காநலகோடிகோடிசத்ருஷி சந்த்ரான்ஷுபிம்பாதரி
சந்த்ரார்காக்னிசமானகுண்டலதரி சந்த்ரார்கவர்னேஸ்வரி
மாலாபுஸ்தக பாஷசாங்குசதரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி

பலகோடி பரிதி,மதி,தீபோல ஒளிர்பவளே!கொவ்வையோ உன்னிதழ்களே?
பானு,மதி போல மின்னும் குண்டலச்செவியாளே!ஈடிணையற்ற எழிலே!
மாலையுடன் புத்தகம்,பாசாங்குசமேந்தி காசிநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!

க்ஷத்ரத்ராணகரி மகாபயகரி மாதா க்ருபாசாகரி
சர்வானந்தகரி சதா சிவகரி விச்வேச்வரி ஸ்ரீதரி
தக்ஷாக்ரந்தகரி நிராமயகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி

ஆதரவு அற்றோர்க்கு அடைக்கலம் அளித்திடும் அன்னையே!அன்புக்கடலே!
யாவர்க்குமின்பமீந்து நலங்காக்கும் நாயகியே!வளவாழ்வு அருளுந்தாயே!
தக்ஷன்திமிர் தணித்தவளே! துயர் தீர்க்கும் அருமருந்தே! காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கரப் பிராணவல்லபே
ஞானவைராக்யசித்யர்த்தம் பிக்ஷாந் தேஹி ச பார்வதி

உணவூட்டும் அன்னையே! உமையே!பேருண்மையே!
நஞ்சுண்டான் உள்ளத்துயிரே!
பிச்சையாய் ஞானமும்,பற்றற்றமனமும் தா!
இமவானின் இனிய மகளே!

மாத ச பார்வதிதேவி பிதா தேவோ மகேஸ்வரஹ
பாந்தவா:ஷிவபக்தாஸ்ச ச்வதேஷோ புவனத்ரயம்

மலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை;
அரனடியாரே எனக்கு உற்றார்;மூவுலகும் என் தாய்நாடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version