(சிவானந்தலஹரியில்) சங்கரபகவத்பாதர் சிவபெருமானைப் பார்த்து, “ என்னிடம் பக்தி என்று ஒரு மாடு உள்ளது. அதை நீ காப்பாற்ற வேண்டும் “ என்று சொன்னார்.
ஏன், மாட்டைக் காப்பாற்ற இறைவனைக் கேட்பதா என்றால், இறைவன் தான் காப்பாற்ற வேண்டும், இறைவனுக்கு ‘பசுபதி’ என்று ஒரு பெயர் உண்டு. ஆகவே அவனே பக்தனது பசுமாட்டிற்குப் பதியாய் விளங்குபவன்.
அவன்தான் மாட்டைப் காப்பாற்ற வேண்டும் என்று சங்கரர் கேட்டுக்கொண்டார்.
அளவில்லாமலிருக்கப்பட்ட சந்தோஷம் என்கிற பாலைத் தரக்கூடியது அந்த மாடு எப்போது சந்தோஷம் கிடைக்கிறது என்று கேட்டால் சந்தோஷம் எப்பொழுதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்