
சங்கடம் தீர்க்கும் தசரதரின் சனி பகவான் ஸ்தோத்திரம்
இப்போது யாருக்கெல்லாம் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறதோ அவர்களுக்காக இந்த பதிவு.
இதை படிப்பதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் மற்றும் தோஷங்கள் நீங்கும்.
இன்று வைகாசி மாத மங்களம் தரும் சனி வாரம் சனி ஸ்தோத்ரம் பாராயணம் செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் சகல ஐஸ்வர்யம் பெருகும்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வாக்கிய பஞ்சாங்கம் மட்டுமே திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு பொருந்தும்.
ஆனால் திருக்கணித பஞ்சாங்கம் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு பொருந்தாது.
ஸ்ரீமஹாவிஷ்ணு மஹா லஷ்மிக்கும் நாராதருக்கும் கூறியுள்ளார்.
சனி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் என்று தசரத மகாராஜாவின் கதை மூலமாக நாராதருக்கு விளக்கியுள்ளார் பரமாத்மா.
நாரத முனிவர் ஒருமுறை ஸ்ரீமஹாவிஷ்ணுவை பார்த்து, பரம்பொருளே !! என்ன செய்தால் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும் இதை நீங்கள்தான் விளக்க வேண்டும் என்று கேட்டார்,
அதற்கு மஹாவிஷ்ணு, நாரதரே நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கவனமாக கேளுங்கள் ஏனென்றால் பக்தியுடன் இதைக் கேட்பவர்கள் கூட துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்று கூறி சனியால் ஏற்படும் சங்கடங்களை வென்ற தசரத மன்னரின் கதையை கூறத் தொடங்கினார்.
ரகு குலத்தில் பிறந்த தசரதச் சக்ரவர்த்தி மஹா பராக்கிரமசாலி.
தசரதனின் ஆட்சி காலத்தில் சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் பிரவேசிக்கும் காலம் வந்தது.
சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கொடியது
வற்கடம் ஏற்படும் அதாவது பஞ்சம் தோன்றி பனிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.
இதைப் பற்றி குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தான் அமைச்சர்களிடம் ஆலோசித்து பூலோகத்தில் மக்கள் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார்.
அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகள் துன்பப்பட வேண்டிய காலம்.
இதைத் தடுப்பது என்பது பிரம்மாவாலும் முடியாத காரியம் என்று கூறினார்.
ஆனால் தசரதச் சக்ரவர்த்தி எப்படியாகிலும் பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவராக வஜ்ஜிரக் கவசம் தரித்து தன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு சனி நட்சத்திர மண்டலத்திற்குள் சென்றார்.
சூரிய மண்டலத்திற்கப்பால் வெகு துரத்தில் பிரகாசித்த ரோகிணி நட்சத்திரற்குப் பின் பாகத்தில் தன்னுடைய ரதத்தில் அமர்ந்தபடி அந்த நட்சத்திரத்தை பாதுகாத்தபடி பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர்.
அன்னப் பறவைகளைப்போல் தூய வெண்ணிறமான குதிரைகளே கூடிய அந்த ரதம் ஒளிவிட்டுப் பிரகாசித்தது அதன்மேல் அசைந்தாடிய கொடி எதிரிகளை விலகிச் செல்லும்படியாக எச்சரித்தது.
தசரத சக்ரவர்த்தி ஆகாயத்தில் இன்னொரு சூரிய பகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.
வில்லை வளைத்து காது வரை இழுத்து நாணில் தொடுத்த பயங்கரமான அஸ்திரத்துடன் தசரதன் சென்று கொண்டிருந்தார்.
தேவர்கள்,அசுரர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவரான சனிபகவான் தசரதச் சக்ரவர்த்தியை பார்த்தார்.
ஆனாலும் சனியின் பார்வை தசரத சக்கரவர்த்தியை எதுவும் செய்யவில்லை.
சனிபகவான் ஆச்சரிய புன்னகை புரிந்தபடி ராஜாதி ராஜனே, உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.
என்னை எதிர்க்கத் துணிந்தவர்கள் பூலோகத்தில் யாரும் கிடையாது, என் பார்வை பட்டவுடன் அவர்கள் சாம்பலாகப் போய்விடுவார்கள்.
ஆனால் நீ நிறைய புண்ணியங்களை செய்திருக்கிறாய்.
அதன் காரணமாகவே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய்.
இதுவும் உனக்காக இல்லாமல் உன் நாட்டு மக்களுக்காக என்னையே எதிர்க்க துனிந்து விட்டாய் !!
ஆஹா உன் தைரியத்தை என்னவென்று புகழ்வது
பலே !!!! நீயே வீரன்
தசரதச் சக்ரவர்த்தியே நான் மகிழ்ந்தேன்.
உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்.
நீ எதைக் கேட்டாலும் தருகிறேன் என்று சனிபகவான் கூறினார்.
அதற்கு தசரத மகாராஜா, அந்த சனிபகவானே ஆச்சரியப்படும்படியான வரத்தை கேட்டார்.
ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது உலக மக்களுக்கு எந்த துன்பத்தையும் தரக்கூடாது.
சூரியர் சந்திரர் உள்ளவரைக்கும் எந்த காலத்திலும் அது நடக்கக்கூடாது என்று வரமாகக் கேட்டார்.
அதற்கு சனிபகவானோ, அவ்வாறே ஆகுக என்று கூறி வரம் கொடுத்தார்.
தசரத சக்ரவர்த்தியிடம் பேசிய சனிபகவான் உனக்காக மேலும் ஒரு வரம் கொடுக்கிறேன்.
என்ன வேண்டுமோ கேள் என்று சொன்னார், அப்போது தசரதன், ரோகிணிக்குள் பிரவேசிக்கும் போது கொடிய பஞ்சம் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர் அத்தகைய பஞ்சம் எந்த காலத்திலும் ஏற்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு சனிபகவான், அந்த வரம்தான் முதலில் கொடுத்து விட்டேன்.
மீண்டும் உனக்கான வரத்தைக் கேள்,
இந்த உலகம் உள்ளவரைக்கும் உன் புகழ் நிலைத்திருக்கும் என்று சொன்னார் சனிபகவான்.
வேறு வரத்தைக் கேள் என்று சொன்னார்.
தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..
நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாயச
நம காலாக்னிரூபாய க்ருதாந்தாய ச வை நம
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்கஸ்மரு ஜடாய ச
நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே
நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம
நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமேஸ்த கோடாராக்ஷாய துர்நிரீஷாயாய வை நமே
நமோ கோராய ரெளத்ராய பீஷணாய கபாலிநே
நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே
சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச
அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
நமோ மந்த கதே,துப்யம் நிஸ்த்ரிம்ஷாய நமோஸ்துதே
தபஸா தக்த தேஹாய நித்யம் யோக ரதாய ச
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய அத்ருப்தாய ச வை நம
ஜ்ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கஷ்யபாத்ம ஜஸுநவே
துஷ்டோ ததாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸி தக்ஷணாத்
தேவாஸுர மநுஸ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா
த்வயா விலோகிதா ஸர்வே நாஸம் யாந்தி ஸமூலதஹ
ப்ரஸாதம் குரு மே தேவ வராரோஹா முபாகதஹா
ஏவம் ஸ்துதஸ் ததா ஸெளரிர் க்ரஹராஜோ மஹா பலஹ
அப்ரவீச் ச புனர் வாக்யம் ஹ்ருஷ்டரோமா து பாஸ்கரி
துஷ்டோ ஹம் தவ ராஜேந்த்ர ஸ்தவேநாநேந ஸுவ்ரத
வரம் ப்ரூஹி ப்ரதாஸ்யாமி ஸ்வேச்சயா ரகுநந்தந
இந்த ஸ்தோத்திரன் விளக்கம் :
கரியவனே, நீல நிறம் படைத்தவனே, நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.
உயர்ந்த தேகம் படைத்தவனே.
உன்னை வணங்குகிறேன் .
அகன்ற விழிகளையுடையவனே உன்னை வணங்குகிறேன்.
பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன்.
புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன்.
அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன்.
சூரிய புத்திரனே, சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடியவனே, மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன்.
ஞானக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.
சனிபகவானே, நீ கருணைக் காட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறான். யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான்.
அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.
ஏ சனி பகவானே யாராக இருந்தாலும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும். யாரையும் கோபப்பார்வை பார்க்க வேண்டாம்.
உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.
நவக்கிரக பகவானும், பயங்கரமனவனும், கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக ,
“ஏ தசரதச் சக்ரவர்த்தியே, உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளித்துவிட்டது உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் .
அதைக் கேட்ட தசரதன் , “ஏ செளரி இன்று முதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது.
தேவர், அசுரர், மனிதரானாலும்,
பறவைகள், விலங்குகள், ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார் .
அதைக் கேட்ட சனிபகவான் ,ஏ ராஜனே ,நீ கேட்ட வரம் சரியானதுதான் ஆனால் ஒரு நிபந்தனை நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.
கருப்பு உளுந்து, எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் காராம் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்தபிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர், ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் துன்பப்படுத்த மாட்டேன்.
கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம லக்னத்தின்படி வரும் அந்திம திசைகளிலும் கூட என்னால் துன்பம் தராமல் ரட்சிப்பேன்.
ஏ ரகுநந்தனா, உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன் என்று கூறினார். தசரதன் அதன் பிறகு சனிபகவானை வணங்கி விடை பெற்றுத் தன்னுடைய ரதத்தில் ஏறி நாடு திரும்பினார்.
சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபார்கள்.
இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியதுமாகும்.
இதுப் போன்ற புனிதமான ஸ்தோத்திரம் பூலோகத்தில் வேறு எதுவும் கிடையாது.
கருப்பு உளுந்து, எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் காராம் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் தசரத மகாராஜா கூறிய ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்து நமஸ்காரம் செய்பவர்களை நான் துன்பப்படுத்தமாட்டேன் என்று சனிபகவானே கூறியுள்ளார்.
ஜாதகத்தில் சனியால் ஏற்படும் ஏழரை சனி அஷ்டம சனி கண்ட சனி போன்ற தோஷங்கள் விலகி விடும்.