
ஸ்ரீராம ஜெயம்
===========
ஸ்ரீஹனுமத் மந்திரம்
ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய|
யசோல க்ருதாய|
அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய| ராம லக்ஷ்மணா நந்தகாய|
கபிஸைன்ய ப்ரகாசந| பருவதோ த்பாடநாய|
ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|
குமார ப்ரம்ஹசர்ய கம்பீர ஸ்ப்தோதயா|
ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|
ஓம் நமோ ஹனுமதே ஏஹி ஏஹி ஏஹி
சர்வ க்ரஹ ப்பூதாநாம்|
ஸாகிநீ டாகிநீநாம்|
விஷம துஷ்டாநாம்| ஸர்வேஷா மாகர்ஷ யாகர்ஷய|
மர்த்தய மர்த்தய| ச்சேதயச் சேதய|
மர்த்தியா ந்மாரய மாரய|
சோஷய சோஷய| ப்ரஜ்வல ப்ரஜ்வல|
ப்பூத மண்டல பிஸாச மண்டல நிரஸநாய|
ப்பூதஜ்வர ப்ரேதஜ்வர| சாதுர்த்திகஜ்வர|
ப்ரஹ்ம்ம ராக்ஷச பிசாச ச்சேதநக்ரியா| விஷ்ணுஜ்வர மஹேஸ்வர ஜ்வரான்|
ச்சிந்தி ச்சிந்தி ச்சிந்தி க்சிந்தி|
அக்ஷீஸூலே ஸிரோப்பியந்தரே|
ஹட்சி ஸூலே குன்மஸூலே|
பித்த ஸூலே ப்ரஹ்ம்ம ராக்ஷஸ குல ப்ரபல நாககுல விநிர்விஷ ஜுடிதி ஜுடிதி |
ஓம் ஹ்ரீம் ப்பட் க்கே க்கே ஸ்வாஹா|
ஓம் நமோ ஹனுமதே பவன புத்ர வைஸ்வாநகமுக
பாபத்துருஷ்டி ஷோடாத்ருஷ்டி ஹனுமதேகா
ஆங்ஞாபுரே ஸ்வாஹா|
என்னுடைய பாட்டனார் வீரகேரளம்புதூர் ராம ஐயங்கார் ஹனூமத் உபாசகராகத் திகழ்ந்தவர். அப்பாவும் அதைப் பின் தொடர்ந்தார். ஆனால் நானோ தடம் மாறி சுதர்ஸன உபாஸனையை கைக் கொண்ட்டேன்.
எங்கள் இல்லத்தில் இந்த ஹனூமத் மந்திரம் அச்சடிக்கப்பட்டு, கண்ணாடி பிரேம் போட்டு வீட்டின் இரண்டாவது கட்டு நிலைப்படியில் மாட்டப் பட்டிருக்கும். தாத்தாவின் சேகரிப்பில் இருந்த ஒரு ச்லோகம் இது. இந்த மந்திரத்தை எழுதியோ அச்சடித்தோ கண்ணாடி பிரேம் போட்டு வீட்டின் வாசல் நிலைப்படியில் தொங்கவிட்டால், வீட்டுக்கு எந்த தோஷமும் வராது என்றும், திருஷ்டி ஏற்படாது; பேய் பிசாசு பில்லி சூனிய தொந்தரவுகள் வராது என்றும் இந்த ச்லோகத்தின் அடிக்குறிப்பில் இருந்தது.
பொது நன்மை கருதி அதனை இங்கே அடியேன் அப்படியே தருகிறேன். ஹனுமான் அருளால் அனைவருக்கும் சகல நலன்களும் கிடைக்கட்டும்.