Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஆன்மிகம்மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?!

மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?!

- Advertisement -
“மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?”

- Advertisement -

( “மந்திர சித்தி ஆயுட்டுத்தா இல்லியாங்கறதை ஜபம் பண்றவா அனுபவ சித்தாந்த்தமா தான்  தெருஞ்சுக்க முடியும்! ஒரு சந்தர்ப்பதுலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தான் இது தெரியும்–(ந்ருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள் கதையைச் சொல்லி பிரம்மச்சாரி இளஞன் சங்கரனின் சந்தேகத்தைப் போக்கிய பெரியவா)

கட்டுரையாளர்-எஸ். ரமணி அண்ணா நன்றி-சக்தி விகடன்-2006

ஒரு முறை காஞ்சி மகா ஸ்வாமிகளை தரிசிக்க வந்திருந்தான் பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன். பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தான்.

அவனை உற்று நோக்கிய ஸ்வாமிகள், நீ குளித்தலை சங்கரன் தானே ? சௌக்கியமா இருக்கியா என்று விசாரித்தார்.

“ஒங்க ஆசீர்வாததுலே சௌக்கியமா இருக்கேன் பெரியவா!” என்றான் சங்கரன்.

“அது சரி, நோக்கு இப்போ என்ன வயசாகறது ?” – இது ஸ்வாமிகள்.

“முப்பது பெரியவா” என்றான் சங்கரன்.

உடனே பெரியவா, “கல்யாணம் பண்ணிக்காம இப்படியே பிரம்மச்சாரியா காலத்தை ஒட்டிடலாமுனு தீர்மானிச்சுடையாக்கும். !” என்று சிரித்தார்.

“ஆமாம் பெரியவா” என்றான் சங்கரன்.

“சரி..சரி. நீ இப்போ வந்திருக்கறதிலேயே ஏதாவது விசேஷம் உண்டா ? விஷயம் இல்லாம நீ வர மாட்டியே !” என்று சொல்லி விட்டு சிரித்தார் ஸ்வாமிகள்.

உடனே சங்கரன், “ஆமாம் பெரியவா ! எனக்கு ஏற்பட்டு இருக்கிற ஒரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிண்டு போகலாம்னு வந்தேன் !” என்றான்.

ஸ்வாமிகள், “அப்படியா! சொல்லு, சொல்லு ! நோக்கு அப்படி என்ன பெரிய சந்தேகம் ? என்று கேட்டார்.

மந்திர ஜபம் சம்பந்தமா ஒரு சந்தேகம் பெரியவா…” என்று சொன்னான் சங்கரன்.

உடனே ஸ்வாமிகள் அவசரமாக, “மந்திர ஜபம் சம்பந்தமானதுனா…நீ ஏதாவது மந்திர ஜபம் பண்ணறயா என்ன ?” என்று கேட்டார்.

“ஆமாம் பெரியவா!” – இது சங்கரன்.

“ஓஹோ…உபதேசம் ஆகியீருக்கோ ?”

“ஆயிருக்கு பெரியவா.”

“பெரியவா (உபதேசம் பண்ணியவர்) யாரோ” ?

“மைசூர் யக்ஞநாராயண கனபாடிகள் !” – சங்கரன்.

“பேஷ்! ரொம்ப வாசிச்சவா. என்ன மந்திரமோ ?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

சங்கரன் வாயைத் திறப்பதற்குள் ஸ்வாமிகள், “இரு..இரு . நீ மந்திரத்தை சொல்லிடப்படாது! அது ரகசியமா ஒன்கிட்டேதான் இருக்கணும். எந்த தேவதா பரமான மந்திரம்னு மட்டும் சொல்லு” என்று உத்தரவிட்டார்.

உடனே சங்கரன், “ஹனுமத் உபாசனா பரமான மூல மந்திரம் பெரியவா” என்றான்.

“சரி! இந்த மூல மந்த்ர ஜபத்திலே நோக்கு நிவர்த்தி பண்ணிக்க வேண்டிய சந்தேகம் என்ன ?”

“இல்லே பெரியவா…இந்த மந்திரம் உபதேசமான இருவத்து மூணாம் வயசிலேருந்து கடுமையா விதிப்படி ஜபிச்சிண்டு வர்றேன்! ஏழு வருஷமா ஜபிக்கிறேன் பெரியவா. ஆனா ஒண்ணுமே தெரியல்லே” என்றான்.

“ஒண்ணுமே தெரியலேன்னா ?” என்று வியப்புடன் கேட்டார் ஸ்வாமிகள்.

உடனே சங்கரன், “இல்லே பெரியவா ! அந்த மந்திரம் ‘நேக்கு சித்தி ஆயிடுத்தா இல்லியா’ங்கறது தெரியலியே பெரியவா!” என்றான் குரலில் வருத்தத்துடன்.

ஸ்வாமிகள் சற்றும் தாமதிக்காமல், “இப்ப அதைத் தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறே நீ? அது போகட்டும்.

நீ ஜபத்தை ஆத்மார்த்ததுக்காக பண்றயா? இல்லே…எதாவது காம்யார்தமா (காரணத்தை உத்தேசித்து) பண்றயா?” என்று வினவினார்.

உடனே சங்கரன் “ஆத்மார்த்ததுக்கு தான் பண்றேன் பெரியவா. இருந்தாலும் மந்திர சித்தி ஆகி அந்த தேவதையின் கிருபை கிடைச்சுடுத்தாணு எப்படி தெரிஞ்சுகரதுனு புரியலே. நீங்க தான் அதைச் சொல்லணுமுன்னு பிரார்த்திக்கிறேன்” என்று வினயத்துடன் கண்களில் நீர் மல்கச் சொன்னான்.

உடனே ஸ்வாமிகள், “மந்திர சித்தி ஆயுட்டுத்தா இல்லியாங்கறதை ஜபம் பண்றவா அனுபவ சித்தாந்த்தமா தான் தெருஞ்சுக்க முடியும்! ஒரு சந்தர்ப்பதுலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தான் இது தெரியும் சங்கரா !” என்று வாத்சல்யத்துடன் சொன்னார்

சங்கரன் சமாதானம் அடையவில்லை. “இல்லே பெரியவா…நேக்கு அனுபவ சித்தான்த்தமெல்லாம் இது வரை ஏற்படலை. ஒண்ணும் புரியவுமில்லை. ஜபத்தை மாத்திரம் குரு சொன்னபடி ஏழு வருஷமா பண்ணிண்டு வர்றேன்! சித்தி ஆயிடுத்தா இல்லியான்னு தெரிஞ்சுக்க முடியலை. மனசு சில நேரம் ரொம்ப ஆயாசப்படறது பெரியவா…இதை நேரடியா