29-05-2023 11:45 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    To Read in other Bharatiya languages…

    நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயிலில் நாளை தை அமாவாசை விழாக்கோலம்..

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயிலில் நாளை விழாக்கோலம்.நாளை தை அமாவாசை அன்று காலை 8 மணிக்கு எண்ணெய்க் காப்பு, மாலை 6 மணிக்கு பத்ர தீபம், சுவாமி புறப்பாடு, நள்ளிரவு கருட சேவை நடைபெறும்.

    நாங்குநேரி வானமாமலை மடத்தின் பீடாதிபதியாக 1984 முதல் 1994-ம் ஆண்டு வரை 29-வது பட்டத்தை அலங்கரித்தவர் ஸ்ரீபட்டர்பிரான் ஜீயர் சுவாமி. வானமாமலைப் பெருமாள் கோயில் ராஜகோபுரத்தை பல ஆண்டுகளுக்குப் பின் சீரமைத்து, சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) நடத்தியவர். அதுபோல் தெப்பக்குளத்தை சீரமைத்து, பெரியகுளத்தில் இருந்து தெப்பத்துக்கு தண்ணீர் வரும் வழிவகைகள் உருவாக்கி, 2 நாட்கள் தெப்பத்திருவிழாவுக்கு ஏற்பாடுகளை சுவாமி மேற்கொண்டார். நடப்பாண்டு நாளை தை அமாவாசை அன்று காலை 8 மணிக்கு எண்ணெய்க் காப்பு, மாலை 6 மணிக்கு பத்ர தீபம், சுவாமி புறப்பாடு, நள்ளிரவு கருட சேவை, மறுநாள் வரும் 22-ம் தேதி இரவு 7 மணிக்கு பெருமாள், தாயார் தெப்ப உற்சவமும், 23-ம் தேதி இரவு 7 மணிக்கு ஆசார்யர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. மடத்தில் தற்போது எழுந்தருளி இருக்கும் 31-வது பட்டம் ஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமி நியமனப்படி ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    nineteen − seven =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    19,024FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-