More
    Homeஆன்மிகம்விழாக்கள் விசேஷங்கள்கோட்டையில் பறக்க விட மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்த தேசிய கொடி..

    To Read in other Indian Languages…

    கோட்டையில் பறக்க விட மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்த தேசிய கொடி..

    மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்ற வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோட்டையில்நாளை குடியரசு தினவிழாவில் பறக்க விட மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்துள்ளது தேசிய கொடி.

    நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை (26-ந் தேதி) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கடற்கரை சாலையில் தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    அதன் பிறகு தேசிய கொடி கோட்டையில் பறக்க விடப்படும். இந்த தேசிய கொடி ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தேசிய கொடியாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கொடி சென்னை வரவழைக்கப்பட்டு காதி கிராமோத் யோக் பவனில் தயாராக உள்ளது. இந்த தேசிய கொடி தயாரிப்பு பற்றி காதி கிராமோத் யோக் பவன் மேலாளர் சுந்தர் கூறியதாவது:-

    மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்ற வேண்டும். மத்திய அரசின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்டெக் மரத்து வாடாவில் காதி நிறுவனத்தில் நான்கு இழைகளால் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகிறது.

    இந்த தேசிய கொடிகளுக்கு என்று தனித்தனி அளவுகள் உள்ளது. கதர் வாரியம்தான் இந்த கொடிகளை விற்பனை செய்யும். அந்த வகையில் விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. கோட்டையில் பறக்க விடப்படும் தேசிய கொடி உள்பட அனைத்து மத்திய-மாநில அரசு அலுவலகங்களும் நிறுவனங்களும் காதி நிறுவனத்தில்தான் தேசிய கொடியை வாங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    sixteen + 16 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,632FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...

    Exit mobile version