இன்று திங்கட்கிழமை ஜூன் 22. இன்று முதல் ஆஷாட மாதம் பிறக்கிறது. வாராகி நவராத்திரி தொடங்குகிறது.
ஒரு வருடத்தில் முக்கியமாக இரண்டு நவராத்திரிகள் கூறியுள்ளார்கள். வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி. இவையன்றி ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் இன்னும் இரண்டு அதிகமான நவராத்திரிகள் தென்படுகின்றன. அவற்றில் ஒன்று ஆஷாட மாதம் பாட்யமி முதல் வரும் நவராத்திரி. இதற்கு வாராகி நவராத்திரி என்று பெயர்.
யக்ஞ வராக ரூபத்தில் பூமியை காத்தருளிய தெய்வசக்திக்கு குறியீடாக, பூமியை ஆதாரமாகக் கொண்டு வாழ்பவர்களுக்கான வழிபாட்டு தெய்வம் ஸ்ரீ வாராஹி தேவி.
இந்த சக்தி தொடர்புடைய மந்திரங்களுக்கு குரு உபதேசம் போன்றவை தேவை. ஆனால் தாயாக வணங்குபவர்கள் அவளுடைய ஸ்தோத்திரங்கள், ஸ்ரீவாராஹி தேவ்யை நமஹ போன்ற நாமங்களோடு இந்த ஒன்பது நாட்களும் பூஜை செய்யலாம்.
பிற தேவதைகளை பூஜை செய்வதற்கு கடைபிடிக்கும் சாதாரண நியமங்கள் போதுமானது.
இச்சாசக்தி ஞானசக்தி கிரியாசக்திகளில் கிரியா சக்திக்குக் குறியீடு வாராஹி தேவி. இச்சா, ஞான சக்திகள் க்ரியா சக்தியில் சேர்த்து விடுவதுபோல் ஷ்யாமளா, லலிதா தேவி வடிவங்கள் ஒன்று சேர்ந்த ரூபம் ஶ்ரீவாராஹிதேவி.
கிராத வாராகி, பைரவி, ஸ்வப்ன வாராகி இவ்விதமாக பல உருவங்களில் பல பெயர்களோடு அருள் வழங்கும் தாய் இவள்.
இந்த ஒன்பது நாட்களும் வாராகி தேவியை மகிழ்விக்கும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், லலிதா அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்து தேவியின் அருளை பெறமுடியும்.