Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் அக்.31: இன்று வால்மீகி ஜெயந்தி!

அக்.31: இன்று வால்மீகி ஜெயந்தி!

valmiki 1
valmiki 1

மனித இனத்தை அதர்மத்தில் இருந்து தர்மத்திற்கும் அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கும் நடத்துவதே வால்மீகி மகரிஷியின் நோக்கம். குடும்ப விழுமியங்களில் இருந்து அரசாட்சி சூத்திரங்கள் வரை மனித தர்மங்கள் அனைத்தையும் ராமாயணத்தில் வால்மீகி அழகாக விவரித்துள்ளார். வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு ஆதி கவியின் கருத்துக்களை எண்ணிப் பார்த்து அதன் படி நடந்து கொள்வோமாக என்று நாட்டின் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வால்மீகி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இன்று வால்மீகி ஜெயந்தியை எதற்காக கொண்டாடுகிறோம்? அந்தப் பெயர் எதனால் வந்தது? சற்று பார்ப்போமா?

இந்து காலண்டர்படி வால்மீகி மகரிஷி பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அஸ்வினி மாதத்தில் பௌர்ணமி அன்று கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சனிக்கிழமை வால்மீகி ஜெயந்தி கொண்டாடுகிறோம்.

வால்மீகி ஜெயந்தி தொடர்பாக நாடெங்கிலும் சில பிரத்யேக நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக அந்த கொண்டாட்டங்களை நடத்துவதற்கு இடமில்லாமல் போனது.

இதுவரை வால்மீகி பிறப்பு குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை. ஆனால் கஸ்யப மகரிஷி அதிதி தம்பதிகளின் ஒன்பதாவது மகனான வருண் மற்றும் சார்சி தம்பதிகளுக்கு பிறந்தவரே வால்மீகி என்று அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

valmiki

அதோடு கூட வால்மீகி மகரிஷி பற்றிய பல கதைகள் வழக்கத்தில் உள்ளன. புராணங்களின்படி வால்மீகி பிரம்மாவின் அம்சத்தோடு பிறந்தார் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். வழிப்பறிக் கொள்ளை செய்தும் விலங்குகளை வேட்டையாடியும் பிற கொடூரங்களும் செய்துவந்த வால்மீகி சப்தரிஷிகளின் போதனையால் மகரிஷி ஆக மாறினார் என்றும் ஒரு கதை உள்ளது. தீய சகவாசங்களோடு கிராதகனாக மாறிய ரத்னாகருக்கு நாரதர் ராம நாமத்தை உபதேசித்தார் என்று கூறப்படுகிறது. ராம நாமத்தை ஜெபித்து கடுமையாக தவம் செய்த அவரைச் சுற்றிலும் புற்று ஏற்பட்டது என்றும் அந்த புற்றுகளின் மத்தியில் இருந்து வெளிப்பட்டதால் ரத்னாகர் வால்மீகியாக மாறினார் என்று மற்றொரு கதை உள்ளது.

இந்த பின்னணியில் வேட்டைக்காரனாக இருந்த வால்மீகி ருஷியாகவும் படைப்பாளியாகவும் எவ்வாறு மாறினார் என்ற விவரங்களை சற்றுப் பார்ப்போம்… புராணங்களின்படி வால்மீகி மகரிஷி கடுமையான தவத்தில் மூழ்கி இருந்தார். அப்போது அவருடைய உடல் மீது கிருமிகள் எல்லாம் ஏறி கூடுகட்டி விளையாடின. வால்மீகி மகரிஷி தவம் முழுமையடைந்த பின் அவற்றை தட்டிவிட்டார். அப்படிப்பட்ட நிலையில் வால்மீகி என்றழைக்கப்பட்டார். அப்போது முதல் வால்மீகி ரத்னாகர் என்ற பெயர் ஏற்பட்டது.

புராணங்களின்படி ஸ்ரீ ராமர் சீதையிடமிருந்து தொலைவாக இருந்த காலத்தில் சீதாதேவி வால்மீகி ஆசிரமத்தில் பல ஆண்டுகள் வசித்து வந்தாள். இங்கேயே சீதாதேவி லவன் குசன் இருவரையும் ஈன்றாள். சீதாதேவியை வனதேவதை என்று அழைப்பதற்கு கூட இதுவே காரணமானது.

valmiki 2

ஒரு வேட்டைக்காரன் ரத்னாகரைப் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டான். அதன் காரணமாகவே அவர் வேட்டைக்காரர்கள் இடையே வளர்ந்தார். அவரும் கூட திருடனாக மாறினார். தான் தவறான மார்க்கத்தில் இருப்பதாக அறிந்து கொண்டபோது, மீண்டும் அந்த தவறை செய்யக்கூடாது என்று தீர்மானித்தார். புது மார்க்கத்தை அனுசரிக்க வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டார். அந்த சமயத்தில் நாரத மகரிஷியை சந்தித்தபோது ‘ராம’ நாமத்தை ஜெபிக்கும்படியும் அந்த மார்க்கத்தில் செல்லும் படியும் நாரதர் குறிப்பிட்டார். அப்போதிலிருந்து சந்நியாசியாக மாறி தவம் செய்யத் தொடங்கினார். பிரம்மா அவருடைய தவத்திற்கு மெச்சி ஞானத்தை அளித்தார். அது மட்டுமல்ல. அவருக்கு ராமாயணம் எழுதும் சாமர்த்தியத்தையும் அளித்தார்.

அஸ்வினி மாதம் பௌர்ணமி அக்டோபர் 30-ஆம் தேதி மாலை 5.45 மணி முதல் 31ஆம் தேதி காலை 8:18 வரை உள்ளது. இவ்விதமாக அக்டோபர் 31ஆம் தேதி வால்மீகி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version