spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்விஜயதசமீ... ஏன்? எதற்கு?

விஜயதசமீ… ஏன்? எதற்கு?

- Advertisement -

விஜய தசமீ ! விஜய தசமீயன்று அபராஜிதையை (ஸ்ரீ மஹாலக்ஷ்மி- ஒருவராலும் வெல்லப்பட முடியாதவள் ) வழிபடவேண்டும் என்று தர்ம சாஸ்த்ரங்கள் விதிக்கின்றன !

எல்லையைத் தாண்டுவது, வன்னி மரத்தை வணங்குவது, தேசாந்தரங்களுக்குப் பயணம் போன்றவைகள் இந்நன்னாளில் செய்யத் தகுந்தனவாம் !

அபராஜிதையை வழிபடும் அரசர்கள், ” யாத்ராயாம் விஜய ஸித்த்யர்த்தம் ” என பூஜை ஸங்கல்பத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் !

ஹாரேண து விசித்ரேண பாஸ்வத் கநக மேகலா |
அபராஜிதா பத்ரதா கரோது விஜயம் மம ||

என்கிற மந்த்ரத்தை வெற்றியை விரும்பும் அரசன் சொல்ல வேண்டியது !

ஊருக்கு வெளியில் ஈசான திசையில் வன்னி மரத்தை பூசிக்க வேண்டியது .. ஊர் எல்லையை பூசைக்கு முன்போ அல்லது பின்போ தாண்டலாம் ..

புரோஹிதர்களையும் மந்திரிப் பிரதானிகளையும் முன்னிட்டுக் கொண்டு அரசன் தன் குதிரை மீதமர்ந்து , வன்னி மரத்தின் அருகே சென்று , கீழிறங்கி ஸ்வஸ்தி வாசன பூர்வகமாக வன்னியை பூசிக்க வேண்டும் !

மம துஷ்க்ருத அமங்கலாதி நிரஸநார்த்தம் க்ஷேமார்த்தம் ” யாத்ராயாம் விஜயார்த்தம் ” ச ஷமீ பூஜாம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் !

( என்னுடைய பாபங்கள், அமங்களங்கள் இவைகளை போக்கிக் கொள்ளவும் , நன்மைக்காகவும், யாத்திரையில் வெற்றிக்காகவும் இந்த வன்னி மரத்தை வணங்குகிறேன் )

அமங்களானாம் ஷமனீம் ஷமனீம் துஷ்க்ருதஸ்ய ச ; து:க்க ப்ரணாசினீம் தந்யாம் ப்ரபத்யேஹம் ஷமீம் சுபாம் ||

( அமங்களங்களையும் பாபங்களையும் அழிப்பதாய், துன்பங்களைப் போக்குவதாய், எல்லா வகைகளிலும் சிறந்ததாயுமுள்ள சுபமான வன்னியை வணங்குகிறேன் )

என்கிற மந்திரத்தைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும் !

ஸ்ரீ ராமனே இப்பூசையை செய்திருப்பதாக பின் வரும் ச்லோகம் உரைப்பதையும் காண்போம் !!

” கரிஷ்யமாண யாத்ராயாம் யதாகாலம் ஸுகம் மயா | தத்ர நிர்விக்ந கர்த்தா த்வம் பவ ஸ்ரீ ராம பூஜிதே || “

இஷ்டமானதைப் பார்ப்பதற்கும்,/ அடைவதற்கும் ,சத்ருக்களின் விநாசத்திற்கும் இப்பூஜை ஆவச்யகமாகும் !!

அச்மந்தக மஹாவ்ருக்ஷ மஹாதோஷ நிவாரண |

இஷ்டாநாம் தர்சனம் தேஹி சத்ரூணாஞ்ச விநாசனம் ||

என்று ப்ரார்த்திக்க வேண்டும் !

எதிரியின் உருவத்தை, பிம்பத்தைச் சமைத்து, அரசன் தன் அம்புகளால் அதனை வீழ்த்த வேண்டும் ..

அதற்கு பதிலாக வன்னி மரத்தில் அம்பெய்வதும் சாத்திரங்களின்படிச் சரியே !!

வாத்தியங்களுடனும் , ஆடல் பாடல்களுடனும் இப்பூசை விமரிசையாகச் செய்யப்பட வேண்டியது !

அரசனின் நன்மையை விரும்புவோர் அச்சமயம் உடனிருக்க வேண்டும் !

கோயில்களில் அச்சமயம் செந்தமிழ் பாடுவார்களும், வடமறை வல்லுனர்களும் எம்பெருமானைச் சூழ்ந்திருப்பது அவனது நன்மையை வேண்டியன்றோ !

நால் திசையிலும் நம் தேவுக்கு வெற்றியே வசமாகட்டும் என்கிற காரணம் பற்றியே , நாற்புறமும் அம்பெய்வது ..

சதுர் திக் விஜயார்த்தம் பாண சதுஷ்டயம் ப்ரயுஜ்ய .. என்று பாத்ம தந்த்ரத்தில் ( ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமம் ) ப்ரமாணம்

விஜய முஹூர்த்தத்தில் தேசாந்தர கமனம் (வெளி தேசங்களுக்கு – ஊர்களுக்கு) செல்ல வேண்டும் .. சாத்திரங்களின் கட்டளைப்படி இவைகள் செய்யப் பெற்றிருந்தால் வெற்றி நிச்சயம் !!! ????

  • கட்டுரை: அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி
  • படங்கள்: வி.என்.கேசவபாஷ்யம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe