வெள்ளிக்கிழமை 31-01-2020 தை 17ஆம் நாள் அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.
அச்சன்கோவில் திருத்தலம், பரசுராமர் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டதால் ஆலயத்தின் வருஷாபிஷேகம், ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த வருடம் சிறப்பு வாய்ந்த புஷ்பாஞ்சலி (வருஷாபிஷேகம்) வைபவம், தை மாதம் ரேவதி நட்சத்திரமான 31-01-2020 அன்று நடைபெறுகிறது.
காலை கணபதி ஹோமம், கலச அபிஷேகம், அஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் களபாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6.30 க்கு யானை மேல் ஊர்வலமாக எழுந்தருளச் செய்யப் பட்டு, சுமார் 2 டன் பூக்களால் மாபெரும் புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.
பக்தர்கள் இந்த வைபவத்தில் தவறாது கலந்து கொண்டு ஸ்ரீ தர்மசாஸ்தா அச்சங்கோயில் அரசன் சுவாமி ஐயப்பனின் அருள் பெற, தாங்கள் அழைப்பதாக புஷ்பாஞ்சலிக் கமிட்டியினர் கூறினர். மேலும், இந்த புஷ்பாஞ்சலிக்கு நன்கொடை, பூக்கள், பூஜை பொருட்களைக் கொடுத்து அனுப்பலாம் என்றும் அவர்கள் கூறினர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 26 கி.மீ., தொலைவில் உள்ள அச்சங்கோவிலுக்கு தற்போது தென்காசி, செங்கோட்டையில் இருந்து கேரள அரசுப் பேருந்து மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப் படுகின்றன.