சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காக நேற்று மாலை 5 மணி அளவில்.. சபரிமலை நடை திறக்கப் பட்டது.
சபரிமலை ஸ்ரீ கோவிலின் #தலைமைபிரம்மஸ்ரீ தந்திரி கண்டரரு மகேஷ் அவர்களின் தலைமையிலும் ஸ்ரீ கோவிலின் மேல்சாந்தி_AK சுதீர்நம்பூதிரி அவர்களால் ஸ்ரீ கோவிலின் திவ்ய சுந்தரத் திரு நடையானது திறக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீ கோவிலானது இரவு 7:30 மணி அளவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப் பட்டது. இன்று காலை சிலை பிரதிஷ்டை தினத்தையொட்டி காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு நிர்மால்ய_தரிசனம்.. நடைபெற்றது. தொடர்ந்து,
5:10மணிக்கு #நெய்யபிஷேகம் ..
5:30மணி அளவில் #கணபதி_ஹோமம்..
6:30மணியளவில் #கலச_பூஜை மற்றும் #கலபாபிஷேகத்திற்கு தயார் செய்தல்..!!
7:30மணிக்கு #உஷபூஜை..
9:மணிக்கு #கலபாபிஷேகம் நடைபெற்று 10 மணி அளவில் சபரீச சன்னிதானத்தின் திரு நடை அடைக்கப்பட்டது.
மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு சபரீசன் சன்னிதானத்தின் திரு நடையானது திறக்கப்பட்டு மாலை 6:30மணி அளவில் பகவானுக்கு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, 6:45 மணி அளவில் அத்தாழபூஜை ஆனது நடைபெறும்!
அத்தாழபூஜை முடிந்தபின் பகவானை யோகநிலையில் ஆழ்த்தி 7:30 மணி அளவில் ஹரிவராசனம் பாடி ஸ்ரீ கோவில் நடை அடைக்கப்படும்..!!