Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை!

ராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை!

rajapalayam-pooja
rajapalayam pooja

இராஜபாளையத்தில் திருச்சிற்றம்பலம் குருநாத சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவார பூஜை . மகா ருத்ர யாகம் மற்றும் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு திருச்சிற்றம்பலம் குருநாத சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு மகா ருத்ரயாகம் அதிகாலை முதல் நடைபெற்றது.

பின் குருநாத சுவாமி -க்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் சோமவார பூஜை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜைகளும், 1008 கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version