திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பாண்டிய மன்னர்களின் 6ம் நூற்றாண்டு காலத்து கோவிலில் மகா பைரவ அஷ்டமி விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது .
இக் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா தேவா அஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.
பைரவர் பிறந்த தினமாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி கொண்டாடப்படுவதால் இன்று சிறப்பு யாகம் ,அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. விழாவில் 60 பக்தர்கள் கலந்து கொண்டனர்.