கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள சென்னம்பாளையம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற எமதர்மர் திருக்கோயிலில் தை அம்மாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள இன்ப விநாயகர், காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் பின்னர் மூலவர் எமதர்மருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தகவல்: SVP சரண்