- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் மதுரை கோயில்களில் சனி மகா பிரதோஷம்: திரண்ட பக்தர்கள்!

மதுரை கோயில்களில் சனி மகா பிரதோஷம்: திரண்ட பக்தர்கள்!

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சனி மஹா பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சனி மஹா பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாதர், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல நாதர் கோயில்களிலும், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் செபாக் விநாயகர், வரசித்தி விநாயகர், யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர், மதுரை ஜெ. ஜெ. நகர் வர சக்தி விநாயகர், கோமதி புரம், ஜீப்பில் டவுன் ஞான சக்தி விநாயகர் ஆலயங்களில் சனி மஹா பிரதோசம் பூஜைகள்
நடைபெற்றது.

சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சுவாமி ஆலயத்தில், சனி மஹா பிர தோஷத்தை ஒட்டி, சனீஸ்வரலிங்கம், நந்திகேஷ்வரர், சிவபெருமான், நரசிம்மர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி, கோயில் பிரகாரத்தில் அலங்காரமாகி வலம் வந்தார்.

ALSO READ:  முட்டாள்தனமான முதலாளித்துவம்!

இந்த விழாவில், தொழிலதிபர் எம். வி. எம். மணி, கோயில் நிர்வாக அதிகாரி இளமதி, பள்ளித் தாளாளர் டாக்டர் எம். மருது பாண்டியன், கவுன்சிலர் எம். வள்ளி மயில், கணக்கர் சி. பூபதி, வசந்த் மற்றும் ஆலயப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இக் கோயிலில் ஜன. 13..ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 5.15..மணி திருவாதிரை யை ஒட்டி, நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர் ஆகியோருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் ச. இளமதி மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்து இருந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version