- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!

மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.

மதுரை.

மதுரை மாவட்ட கோயில்களில், திருவாதிரை யை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில், திருவாதிரை யை முன்னிட்டு, நடராசர், அம்பாள், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து சுவாமி, அம்பாள், மாணிக்க வாசகர் அலங்கரிக்கப்பட்டு, கோயில் பிரகாரத்தில் கோமாதா பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள், பசுவை வலம் வந்து வழிபட்டனர். இதையடுத்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர் முன்பாக திருவெம்பாவை பாராயணம் நடைபெற்றது.

இதில் கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, தொழிலதிபர் எம். வி. எம். மணி, கவுன்சிலர் வள்ளி மயில், கோயில் கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ALSO READ:  சமயபுரம் கோயிலில் புரட்டாசி பௌர்ணமி 108 விளக்கு பூஜை

இதேபோல, திருவேடகம் ஏடகநாதர் சுவாமி, தென்கரை மூல நாதர், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் செபாக் விநாயகர், சித்தி விநாயகர், மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் திருவாதிரை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version