- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்

கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்

ஜூலை மாதம் 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை நாளில் மூலவருக்கு வழக்கம் போல் பூஜைகளும் தீபாராதனைகளும் 6 மாதங்கள் கழித்தே நடைபெறும்.

பிரசித்தி பெற்ற மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் 3 வருடத்திற்கு ஒரு முறை மூலவர் சுந்தர ராஜ பெருமாள், தேவியர்களுக்கு திருத்தைலம் சாத்தப்படுவது வழக்கம்.

அதன்படி வரும் தை அமாவாசை 29.01.2025 புதன்கிழமை அன்று காலை 09.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறவுள்ளது.

இனிவரும் 6 மாத காலங்களுக்கு மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறாது ஆகவே தை மாதம் அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய (27.01.2025 முதல் 24.07.2025 வரை ) நித்தியபடி மாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்துப்படி அனைத்தும் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாளுக்கு (கள்ளழகர்) மட்டும் நடைபெறும்.

வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை நாளில் மூலவருக்கு வழக்கம் போல் பூஜைகளும் தீபாராதனைகளும் 6 மாதங்கள் கழித்தே நடைபெறும்.

எனவே பக்தர்கள் உத்ஸவர் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாளை தரிசித்து அருள்பெற வேண்டுமாய் திருக்கோயில் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

ALSO READ:  வெறுப்புணர்வே அன்பும் அமைதியுமாய் பிரசாரம் செய்யப் படுவது ஏனோ?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version