இந்தப் படத்தில் உள்ள மாலை மாணிக்க மாலை. அதாவது மாதுளை பழம் முத்துகளால் ஆன மாலை. இந்த மாலையில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த முத்துகளை ஊசியால் கோக்க மாட்டார்கள்… நூல் வைத்து தொடுப்பார்காள்
இந்த மாலை மார்கழி மாதத்தில் அத்யயன உத்ஸவத்தில் மட்டும் சாற்றுவார்கள். இந்த மாலை தொடுக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே தொடுக்க முடியும். இது, இன்று ஆழ்வார் திருநகரியில் மட்டுமே நடைமுறையில் உள்ளது!
இந்த மாணிக்க மாலையை சுவாமி பொலிந்து நின்ற பிரான் சாற்றிக் கொண்டிருக்கும் அழகே அழகுதான்!