மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடை பெறும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் இன்றும் நாளையுமாக நடைபெறுகிறது.
உலகப் புகழ் பெற்றது இந்த ஓட்டம். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடை பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இன்றும் நாளைமாக நடைபெறும்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். நாளை சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து,கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்று சிவபிரானைத் தரிசிக்கிறார்கள்.
இங்குள்ள பனிரெண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம் என கூறப்படுகிறது. இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ. ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள். ஹரியும் சிவனும் ஒண்ணு என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம். ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருகிறதாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு சிவாலயங்கள் ஆகும். மஹா சிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிவார்கள்; அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள்; சிவராத்திரிக்கு முன் தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்
“கோவிந்தா,கோபாலா” என்று கோஷமிட்டபடி திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்குவார்கள்! அந்தத் தொடர் ஓட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்; சிவாலயங்களை தரிசிக்க ஓடுபவர்கள்!
கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணுநாமம் சொல்லி ஓடுவது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு. சிவராத்திரியை முன்னிட்டு நாளை குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.