மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 8- வது நாளான இன்று (15.4.19) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் மற்றும் செங்கோலுடன் மீனாட்சி அம்மன் காட்சி அளித்தார்.
சித்திரை மாதம் முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் மதுரையை மீனாட்சி ஆட்சி புரிவதாக ஐதீகம்.