அட்சய திரிதியை நாள் என்பது, தான தர்மங்கள் செய்து, தர்மம் வளர்க்க வேண்டிய நாள். எனவே 27 நட்சத்திரங்களில், அவரவர் பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டவர்கள், இந்த தானங்களைச் செய்தால், வாழ்வில் நன்மை பெருகும்.
1.அஸ்வினி – கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
2.பரணி – நெய்தானம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
3.கிருத்திகை – சர்க்கரை பொங்கல் தானம். பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
- ரோகிணி – பால் அல்லது பால் பாயாசம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
5.மிருக சீரிஷம் – சாம்பார் சாதம் தானம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
- திருவாதிரை – தயிர் சாதம் தானம். ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.
7.புனர்பூசம் – தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
- பூசம் – மிளகு கலந்த சாதம் தானம். கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.
ஆயில்யம் – வெண் பொங்கல் தானம். பச்சை பயிறு தானியத்தை பசு மாட்டுக்கு கொடுக்கலாம்.
மகம் – கதம்ப சாதம் தானம். கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.
பூரம் – நெய் சாதம் தானம். மனநோயாளிகளுக்கு உதவலாம்.
உத்திரம் – சர்க்கரை பொங்கல் தானம். கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.
அஸ்தம் – பால் பாயாசம் தானம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
சித்திரை – துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
சுவாதி – உளுந்து வடை தானம்.வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கிக் கொடுக்கலாம்.
விசாகம் – தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
அனுசம் – மிளகு கலந்த சாதம் தானம். வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.
கேட்டை – வெண் பொங்கல் தானம். பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.
மூலம் – கதம்ப சாதம் தானம். ஏழைகளுக்கு உதவலாம்.
பூராடம் – நெய் சாதம் தானம். ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
உத்திராடம் – சர்க்கரை பொங்கல் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
திருவோணம் – சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல்தானம் செய்யலாம்.
அவிட்டம்- சாம்பார் சாதம் தானம். கால்நடைகளுக்கு துவரை வாங்கி கொடுக்கலாம்.
சதயம் – உளுந்து பொடி சாதம் தானம். கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் கொடுக்கலாம்.
பூரட்டாதி -தயிர் சாதம் தானம்.
26.உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
27.ரேவதி -வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது.