திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ சங்கரநாராயணர் கோவிலில் கோமதியம்மன் ஆடித்தபசுத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாரயணசுவாமி- கோமதி அம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடித்தபசு வருகிற 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.