மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…
அன்னவயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்-இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்த சுடர் கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்!-நாடிநீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா, வண்ணமே நல்கு.
திருப்பாவை. 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!*
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்கள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்*
நாராயணனே நமக்கேபறை தருலான்*
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்.
{தொடரும்.}