வள்ளல் பெரும் பசுக்கள் .. ஆறாயிரப்படி
உதார : சந்தர்ஸயன் என்றார் ஆளவந்தார். அதாவது இந்த பசுக்கள் பாலை கொடுக்கும்போது மற்றவர்களுக்கு உதவுவதாக நினைத்து கொடுப்பதில்லை. மாறாக தங்களுக்கு பேறாக கொடுக்கின்றன என்றபடி. ஒரு ப்ரதி-உபகாரம் எதிர்நோக்கி கொடுப்பதில்லை. தங்களுக்கு அது ஒரு பேறாகக் கருதிக் கொடுக்கின்றன என்றபடி (உதார ஸ்வபாவமா யிருக்கை).
ஆசாரியர்கள் ரகசியங்களை எல்லோருக்கும் கொடுத்தால் அல்லது தரிக்கமாட்டார்கள். விளங்கிய மேகத்தை ( இராமானுச நூற்றந்தாதி-26) என்ற பதம் இங்கு நோக்கத்தக்கது.
ஆசார்ய ஹ்ருதயத்தில் மேகத்துக்கு (மேகம் பருகின ஸமுத்ர … ஆ. ஹ்ரு 72) உட்பொருள் சொல்லுகையில், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் “மேகம் வர்ஷிப்பது அதன் ஸ்வபாவம்”. அதனுடைய வள்ளல்தனம். எதையும் எதிர்பார்த்து வர்ஷிப்பதில்லை.
அதேபோல் ஆசார்யர்கள் அர்த்தங்களை கொடுத்தல்லது தரியார்கள், என்றபடி. இங்கு ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினம்-4, உதார: என்று, பராசர மகரிஷி தத்வார்த்தங்களை நமக்கு கொடுத்ததற்கு உதார: என்று கொண்டாடுகிறார் பரமாச்சாரியார் ஸ்ரீ ஆளவந்தார்.
திருவாய்ப்பாடியில் உள்ள பசுக்களும் இத்தன்மை கொண்டது என்பது இங்கு திருவுள்ளம்.
- வானமாமலை பத்மனாபன்