ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் டோர்ன மென்டில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை, உலகச் சேம்பியன் பிவி சிந்து நன்கு விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
மிகச் சிறப்பாக ஆடிய சிந்து 21-15, 21-16 என்ற வித்தியாசங்களில் கிம்மை தோற்கடித்தார். தொடக்கத்திலிருந்தே சிந்து உற்சாகமாக ஆடினார். தரவரிசையில் தன்னை விட மிகப் பின்னுள்ள ஷட்லர் மீது முழு அதிகாரம் செலுத்தி ஆடினார். நெஞ்சை வசப்படுத்தும் ஷாட்டுகளோடு ரசிகர்களை மகிழ்வித்த சிந்து எந்த நிலையிலும் போட்டியாளருக்கு மீண்டெழும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
தென்கொரியா வீராங்கனை ‘கிம் கா உன்’ உடன் நடந்த மேட்சில் சிந்து வெற்றியை வசப்படுத்திக் கொண்டார்.
வலிமையாக ஆடி எளிதாக போட்டியை தன்வசப்படுத்திக் கொண்டார்.
இரண்டாவது கேமில் கூட சிந்துவுக்கு போட்டி இல்லாமல் போனது . உற்சாகமாக ஆடிய சிந்து எளிதாக வென்று இரண்டாவது ரவுண்டுக்குள் நுழைந்தார்.
ஆனால் மறுபுறம் சாய்னா நேவாலுக்கு சிக்கல் ஏற்பட்டது. சிறிது காலமாகவே பலவீனமான ஆட்டத்தால் போராடிக்கொண்டிருந்த சாய்னா ஹாங்காங் ஓபனிலும் ஏமாற்றத்தை அளித்தார்.
சைனா நாட்டை சேர்ந்த வீராங்கனை ‘காய் யான்’ உடன் நடந்த மேட்சில் சாய்னா தோல்வியடைந்தார். இது நம் சாய்னா தானா என்பது போல் நடந்த போராட்டத்தில் காய், 21- 13, 22 -20 என்ற வித்தியாசத்தில் சாய்னாவை தோற்கடித்தார்.
முதல் செட்டில் சாய்னா முழுவதுமாக ஏமாற்றிவிட்டார். எதிரிக்கு குறைந்த அளவு போட்டி கூட அளிக்கவில்லை. ஆனால் இரண்டாவது கேமில் கொஞ்சம் ஆறுதல் அளித்தார். ஆனால் வெற்றி மட்டும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது.
இன்னொருபுறம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு கலப்பு பலன் கிடைத்துள்ளது. சமீர் வர்மா முதல் ரவுண்டிலேயே வீட்டை பார்க்க நடந்தார். ஆனால் ஹெச் எஸ் ப்ரணய் முதல் ரவுண்டில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.