spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு கொரோனோ பாதிப்பு !

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு கொரோனோ பாதிப்பு !

- Advertisement -
afridi gambhir
afridi gambhir

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான ஷாகித் அப்ரிடி தமக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் தாம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக  அப்ரிடி கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி சனிக்கிழமை கொரோனா வைரஸ் சோதனையில் பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள்  வந்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்

27 டெஸ்ட், 398 ஒருநாள் போட்டிகள் (ஒருநாள்) மற்றும் 99 டி-20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய அப்ரிடி, ட்விட்டரில் தமக்கு கொரோனா இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளார். மேலும்,  வியாழக்கிழமை முதல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், கொரோனா வைரஸுக்கு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், தனது முடிவுகள் பாசிட்டிவ் என்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

 “வியாழக்கிழமை முதல் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன்; என் உடல் மோசமாக வலிக்கிறது. நான் பரிசோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக எனக்கு பாசிட்டிவ் என்று சோதனைமுடிவு வந்தது. நான்  விரைவாக மீண்டு வர பிரார்த்தனை தேவை” என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்பிகுர் ரஹிம்,  தான் பயன்படுத்திய ஒரு பேட்-ஐ  ஒரு தொண்டு நிறுவனம் மூலம் ஏலம்  நடத்த விட்டதில், அது போலியானது என்று திரும்பப் பெறப் பட்டது.  அப்போது  ஷாஹித் அப்ரிடி பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீமுக்கு சொந்தமான அந்த கிரிக்கெட் மட்டையை வாங்குவதில் இறங்கினார்.

இலங்கைக்கு எதிராக 2013 ல் பங்களாதேஷின் முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை அடித்த முஷ்பிகூர், கடந்த வாரம் ஆன்லைனில் அதிக விலைக்கு ஏலம் விட்டார். ஆனால், 50,000 அமெரிக்க டாலருக்கு மேல் விலையை நிர்ணயித்ததால் அமைப்பாளர்கள் அந்த ஏலத்தை நிறுத்தினர் என்று முஷ்பிகூர் கூறினார்.

அதன் பின்னர் “அஃப்ரிடி என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டார், நான் அவருக்கு ஏலத்தின் இணைப்பை அனுப்பினேன்” என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஆன்லைன் மன்றத்தில் தெரிவித்தார்.

“மே 13 அன்று அவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி 20,000 அமெரிக்க டாலர்களை வழங்கினார். இந்த பணத்துடன் அவர் எனது மட்டையை வாங்கினார். நான் உண்மையிலேயே சலுகை பெற்றேன்” என்று அவர் கூறினார்.

20 ஆண்டுகளுக்கும் மேலான தனது தொழில் முறை வாழ்க்கையில், ஷாகித் அஃப்ரிடி 27 டெஸ்ட், 398 ஒருநாள் போட்டிகள் (ஒருநாள்) மற்றும் 99 சர்வதேச டி 20 போட்டிகளில் பாகிஸ்தான் சார்பில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 8,064 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 1,716 ரன்களும், டி20 யில் 1,416 ரன்களும் எடுத்தார்.

பேட்டிங் மட்டுமல்லாது, அஃப்ரிடி தனது பந்துவீச்சு திறனால் ரசிகர்களை அதிகம் பெற்றார்.  டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் முறையே 48 மற்றும் 98 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 50 ஓவர் வடிவத்தில் 395 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe