சிலெட் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது. நேற்று ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி முதல் இன்னிங்சில் 282 ரன் குவித்து ஆல் அவுட்டானது.
இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 51 ஓவரில் 143 ரன்னுக்கு சுருண்டது. 139 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்துள்ளது.