மெல்போர்ன் : இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடியது. அறிமுக வீரர் மயங்க் அகர்வால், சிறப்பாக விளையாடி தனது முதல் போட்டியிலேயே முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. 2ம் நாள் ஆட்டத்தில் இன்று காலை கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்தார். சத்தேஸ்வர் புஜாரா, சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில், இது புஜாரா அடிக்கும் 17 வது சதம்.