spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்சர்ச்சுகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு சதி! தஞ்சை கோயில் குடமுழுக்கு சர்ச்சையின் பின்னணி!

சர்ச்சுகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு சதி! தஞ்சை கோயில் குடமுழுக்கு சர்ச்சையின் பின்னணி!

- Advertisement -

தஞ்சை கோயில் குடமுழுக்கு தமிழ் சமஸ்கிருத மொழிவெறி அரசியல் களமாக்கும் “கிறிஸ்துவ டேவிட்” என்கிற “தஞ்சை பெ.மணியரசன் உண்மை முகம்”!!

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில் மட்டுமே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று வரக்கூடிய
1.2.2020 சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் , அதில் பெ. மணியரசன் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு, சீமான் ( நாம் தமிழர் கட்சி) திரைப்பட இயக்குனர் மு களஞ்சியம், இரா. முத்து ராசமூர்த்தி, அரசன் ஜெய்னுல் ஆபிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), அகமது கபீர் சிமியோன் சேவியர் ராசு ஐஜேகே , நல்ல துரை வழக்கறிஞர் அமமுக….. என பலர் கலந்துகொண்டு தஞ்சை கோவிலில் தமிழில் மட்டுமே வழிபாடு கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்று போராட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்துக் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்று போராடக் கூடிய போராட்டத்தில் பிற சமயத்தை சார்ந்த இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு என்ன வேலை? என்பதை சாதாரண ஒவ்வொரு இந்துவும் கேள்வி எழுப்புகிறார்கள்..

இது தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்னெடுத்து இஸ்லாமிய மசூதிகளில் கிறிஸ்தவ சபைகளில் சொல்லக்கூடிய தமிழ் அல்லாத அரபு லத்தீன் ஆங்கில மொழி ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு தமிழின் பெயரால் பிழைப்பு நடத்தக்கூடிய இந்த தலைவர்கள் தயாரா?

தமிழ் தேசிய இயக்கம் என்ற பெயரில் இவ்வளவு நாள் அரசியல் செய்யும் தஞ்சை மணியரசன் “டேவிட்” என்ற கிறிஸ்தவர் என்பது அவருடைய மனைவி சொன்ன வார்த்தைகளில் இருந்து, பேட்டியிலிருந்து வெளியாகிறது.

தமிழ் சமஸ்கிருதம் என்ற பெயரில் “மொழி பிரிப்பு அரசியலை” “இந்துமத உடைப்பு அரசியலை” பெரும்பான்மை இந்துக்கள் ஒன்றாக கூடிய தஞ்சை பெரிய கோயிலில் அரங்கேற்றிக் இருப்பதற்கு பின்னணியில் கிறிஸ்தவர்களுடைய சதி இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

டேவிட் மணியரசன் இவ்வளவு நாள் தன்னை பெரிய “தமிழ் மொழிக் காவலர்” போல காட்டிக்கொண்டு “டேவிட் “என்கின்ற கிறிஸ்தவ பெயரை மறைப்பதற்கான காரணம் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

“திட்டமிட்ட திருச்சபைகளின் செயல்திட்டத்தை” தமிழ் சமூகத்தில் தமிழக மக்களிடம் விஷக் கருத்துக்களை விதைக்கக் கூடிய வேலையைத்தான் மணியரசன் என்கின்ற டேவிட் செய்யத் தொடங்கியிருக்கிறார் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.

தமிழக அரசு காவல்துறை இது போன்ற மத பதட்டத்தை உருவாக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கினால், நாளை மசூதிகளிலும் கிறிஸ்தவ சபைகளிலும் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு இந்து இயக்கங்களும், ஒவ்வொரு இந்துக்களும், பொதுமக்களும் தேசியவாதிகளும் போராட தொடங்கினால் என்ன ஆகும் என்பதை சற்று சிந்திக்க வேண்டுகிறேன். எனவே இந்தப் போராட்டத்தை அனுமதிக்கக்கூடாது.

போலி பெயரில் உலவிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி வரும் கிறிஸ்தவ திருச்சபைகளில் கைக்கூலிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும் போராட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை இந்து தமிழர் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் முன் வைக்கிறோம்.

“டேவிட் “என்கின்ற மணியரசன் மனைவியார் சொன்ன பேட்டியை ஒரு புலனாய்வு இதழ் வெளியிட்டிருக்கிறது.

  • ராம.ரவிக்குமார் (இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe