ஐம்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் ரசாயன ஆலை நிறுவுவது தொடர்பாக, வெளிநாட்டு நிறுவனத் தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்காவில் ஹெல்டா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 50,000 கோடி ரூபாய் முதலீட்டில், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைப்பது குறித்து, அதன் நிறுவனத் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணைத்தலைவர் ராபின் முகோபாத்யாய் ஆகியோருடன் முதலமைச்சர் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது மேற்கொண்ட #MoU-ன் தொடர்ச்சியாக மாண்புமிகு முதல்வர் அவர்களை #Haldiapetrochemicals நிறுவன தலைவர்,நிர்வாக துணை தலைவர் ஆகியோர் சந்தித்து கடலூர் மாவட்டத்தில் ரூ.50,000 கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு,பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது குறித்து ஆலோசித்தனர். pic.twitter.com/NubSxpwPyy
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 7, 2020