மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் மத்திய அரசு, ஒரு பால்கனி அரசு என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.
கமல்ஹாசனின் பதிவுக்கு பதிலடி தந்திருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது ; பால்கனி அரசாங்கமா ? இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இது.
65 ஆண்டுகளாக பணம் ஒன்றையே குறியாக கொண்டு, அதை ஈட்டுவதில் மும்முரமாய் இருந்த பால்கனி பையன் விமர்சிக்கிறார். மத்திய அரசு ஏழை மக்களுக்கு உதவ ஒரே தவணையாக ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது என்று விமர்சித்து உள்ளார்.
Balcony government? This govt has come to power with 2/3 majority with the support of grassroot level downtrodden people. But a Balcony boy who spent his 65 years busy making money is blabbering today against a govt which with one stroke has given 1.7 lac crores to poor. Shsme https://t.co/AUbzyviBF9
— H Raja (@HRajaBJP) April 18, 2020